தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.7 தொகுப்புரை

    கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன்,

    தன்னை வந்தடைந்த பரிசிலர்க்கு அளவு இல்லாது பெருஞ்செல்வம் அளிப்பவன்.

    கடலிடத்தே எதிர்த்த பகைவரை வென்றவன்.

    இமய முதல் குமரி வரையுள்ள அரசர் பலரை வென்று அவர் நாட்டை அழித்தவன்.

    அறுகை என்ற தன் நண்பனுக்காக மோகூர்ப் பழையன் மீது படையெடுத்துச் சென்று வென்று, அவன் காவல் மரமாகிய வேம்பினை வெட்டி வீழ்த்தியவன்.

    போர்க்களத்திலேயே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழிப்பவன் என்ற சிறப்புகளுக்குரியவன் எனப் பரணர் இப்பத்தில் சித்திரித்துள்ளார்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1. பேரெழில் வாழ்க்கை என்னும் பாட்டு செங்குட்டுவனைக் குறித்துக் கூறுவன யாவை?
    2. வெருவரு புனல்தார் என்ற பாட்டு செங்குட்டுவனின் வீரத்தை எங்ஙனம் மொழிகின்றது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-11-2017 16:59:14(இந்திய நேரம்)