தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU--விடை

  • தன் மதிப்பீடு
    :
    விடைகள்-II
    5.
    கீழே தந்துள்ளவைகளுக்கு வரையறை தருக.
    1. தெளிவு
    1. மருளுற்று உரைத்தல்
    1. எதிர்மறை
    1. பாங்கிற் கூட்டல்
    1. தெளிவு : தலைவன் தனது நிலைப்பாட்டை வற்புறுத்தி
      உரைப்பது வன்புறை எனப்படும். அந்த வன்புறை
      வார்த்தைகளை ஏற்றுத் தலைவன் சொல்வது
      உண்மையானதுதான்; ஏற்புடையதுதான்’ என்று
      தெளிந்து தலைவி ஆற்றியிருப்பது தெளிவு எனப்படும்.

    “தலைவன் மாற்றம் தலைவி தேற்றம் தெளிவாம்
    என்பர்” (களவியல் 14) என்பது இலக்கண நூற்பா.

    1. மருளுற்று உரைத்தல்: தலைவி பிரிந்து சென்றபோது
      தலைவன் மனம் கலங்கிப் பேசுவது பிரிவுழிக் கலங்கல்
      எனப்படும். அதன் ஒரு பிரிவே மருளுற்று உரைத்தல்
      ஆகும். மருளுற்று உரைத்தல் என்றால் மயக்கம்
      கொண்டு பேசுதல் என்று பொருள்.
    1. எதிர்மறை : தலைவனது காதலைக் (களவை)
      கேட்டறிந்த பாங்கன ‘நினக்கு இது தக்கது அன்று’
      என்று தலைவனிடம் இடித்துரைப்பது எதிர்மறை
      எனப்படும்.
    1. பாங்கன் வாயிலாகத் தலைவியைக் கூடி மகிழ்ந்த
      தலைவன் ‘இனி     நீ வரும்போது நின்
      உயிர்த்தோழியோடு வருக!' என்று கூறி, தலைவியை
      அவளது தோழி இருக்கும் இடத்திற்கு அனுப்பி
      வைத்தல் பாங்கிற் கூட்டல் எனப்படும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2017 12:44:29(இந்திய நேரம்)