Primary tabs
-
3.0 பாட முன்னுரை
இப்பாடத்தின்கீழ் மெய் ஒலிகள் என்றால் என்ன என்பது பற்றியும், அவை எங்கு, எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றியும், அவற்றின் பாகுபாடு பற்றியும் அறிய இருக்கிறோம். தமிழ் இலக்கண நூலார் மெய் ஒலிகளை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகப் பிரித்தது பற்றி அறிய இருக்கிறோம். மெய் ஒலிகளைத் தற்கால மொழியியலார் வெடிப்பொலிகள், மூக்கொலிகள், மருங்கொலிகள், வருடொலிகள், உரசொலிகள், அரை உயிர்கள் என ஆறுவகையாகப் பிரித்து விளக்குவது பற்றியும் அறிந்து கொள்ள இருக்கிறோம். மேலும் மெய் ஒலிகள் பிறக்கும் இடங்கள் பற்றியும், அவ்விடஙகளில் அம்மெய் ஒலிகள் எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றியும் விளக்கமாகக் காண இருக்கிறோம்.