Primary tabs
3.5 தொகுப்புரை
இப்பாடத்தின்கீழ் மெய் ஒலிகள் என்றால் என்ன? அவை எங்கு, எவ்வாறு பிறக்கின்றன என்பது பற்றித் தொல்காப்பியர் முதல் இன்றைய மொழியியலார் வரை என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றிப் படித்தீர்கள். குரல் இலா ஒலி, குரல் உடை ஒலிகளுக்கான வேறுபாட்டினை அறிந்தீர்கள். தமிழ் இலக்கண நூலார் மெய் ஒலிகளை எவ்வாறு பாகுபடுத்துகின்றனர் என்பதையும், மொழியியலார் எவ்வாறு பாகுபடுத்துகின்றனர் என்பதையும் அறிந்தீர்கள். வெடிப்பொலிகள், மூக்கொலிகள், மருங்கொலிகள், வருடொலிகள், உரசொலிகள், அரை உயிர்கள் என ஆறாக மெய் ஒலிகள் பிரிக்கப்பட்டமை பற்றிப் படித்தீர்கள். சொல்லில் எம்மாதிரியான இடங்களில் குரல் இலா ஒலி வருகிறது என்றும், எம்மாதிரியான இடங்களில் குரல் உடை ஒலி வருகிறது என்றும் படித்து உணர்ந்தீர்கள்.