தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை



  • 1)

    பண்டைக்காலக் கோட்டைகளில் பயன்பட்ட இயந்திரப் பொறிகளும் எவையேனும் ஐந்தனைக் கூறி விளக்குக.
    (1)
    வளை விற்பொறி
    -
    வளைந்து தானே எய்யும் இயந்திரம்
    (2)
    கருவிரலூகம்
    -
    கரிய விரல்களுடைய குரங்கைப் போல் இருந்து அருகே வரும் எதிரிகளைப் பிடித்துக் கொல்லும் பொறி.
    (3)
    கல்லுமிழ் கவண்
    -
    தானே கற்களைப் பகைவர் மீது எறியும் கவண்
    (4)
    பாகடுகுழிசி
    -
    செம்பையோ வெல்லப் பாகையோ உருக்கி வைத்துக் கொண்டு எதிரிகள் மீது சிதறும் பாத்திரம்.
    (5)
    தொடக்கு
    -
    கழுக்கோல் போல எதிரியின் கழுத்தில் பூட்டி முறுக்கும் சங்கிலி.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:40:40(இந்திய நேரம்)