Primary tabs
-
1.7 தொகுப்புரை
கி.ராஜநாராயணன் தன்னுடைய சுற்றுப்புற மக்களின் வாழ்க்கை நிலைகளை அதற்குரிய சூழலில் இயல்பாகவும், கலைத் தன்மையுடனும் பதிவு செய்து ஒரு சிறப்பான பங்களிப்பைத் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கிறார். இயற்கையோடு இரண்டறக் கலந்த கிராம மக்களின் வாழ்க்கையைக் கூறுவது இவரது தனிச்சிறப்பாகும்.