தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6:3-தொகுப்புரை

  • 6.3 தொகுப்புரை

    நண்பர்களே! இதுவரை திருக்காவலூர்க் கலம்பகம் என்ற கலம்பக நூலைப் பற்றிப் பார்த்தோம். இந்தப் பாடத்தின் மூலம் எந்த எந்தச் செய்திகளை அறிந்துள்ளீர்கள் என்பதை நினைவு படுத்திப் பார்க்கலாம்.

    திருக்காவலூர்க் கலம்பகம் என்ற நூலுக்கு அந்தப் பெயர் ஏற்படக் காரணம் என்ன என்பதை அறிந்து கொண்டீர்கள்.

    இந்த நூலின் ஆசிரியரைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள்

    இந்த நூலின் அமைப்பு விளங்கி இருக்கும்.

    இந்த நூலின் தனிச் சிறப்புகள் பற்றிப் படித்தீர்கள்.

    இந்த நூலில் இடம்பெறும் கலம்பக உறுப்புகள் எவை எவை என்பது தெரிந்து இருக்கும்.

    இக்கலம்பக உறுப்புகளில் இடம்பெறும் சில செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள்.


    தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.

    திருக்காவலூர் மக்களுக்கு நிலவு சுடுவதில்லை. ஏன்?

    2.

    குறம் என்ற உறுப்பின் பொருள் யாது?

    3.

    உலகில் ஆன்மாக்கள் எந்தக் கடலில் வீழ்ந்து துன்பம் அடைகின்றன?

    4.

    உலக மக்கள் துன்பக் கடலில் விழுந்து தவிக்கும் போது அவர்களைக் காப்பாற்றும் தெப்பம் யாது?

    5.

    அடைக்கல அன்னையின் ஆடை யாது?

    6.

    சமூக உல்லாசம் என்ற கலம்பக உறுப்பின் பொருள் யாது?

    7.

    சித்து என்ற உறுப்பில் கூறப்படும் செய்தி யாது?

    8.

    சம்பிரதம் என்ற உறுப்பின் பொருள் யாது?

    9.

    அம்மானை என்ற உறுப்பு எத்தனைப் பெண்கள் பாடுவதாக அமையும்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2017 17:55:11(இந்திய நேரம்)