தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

(விடை)

  • 3)
    அற்புதத்திருவந்தாதியிலிருந்து உவமை நயத்துக்கு ஓர் எடுத்துக் காட்டுத் தருக.

    இயற்கையை உடலாகக் கொண்டவன் சிவன். ஒரு நாளின் பொழுதுகளையே உவமையாக்கி, சிவபெருமானை வர்ணிக்கும் அழகைப் பாருங்கள்.

    காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
    வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின்
    தாங்குருவே போலும் சடைக்கற்றை மற்றவர்க்கு
    வீங்கிருளே போலும் மிடறு
    - (65)

    வேளைக்கு வேளை இயற்கை அடையும் நிறங்கள் சிவபெருமான் திருமேனியில் திகழ்தலைச் சுட்டிக் காட்டுகிறார்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2017 16:18:33(இந்திய நேரம்)