Primary tabs
-
2.5 தொகுப்புரை
இப்பாடத்தினால் நாம் அறிந்து கொள்ளும் சிறப்பான செய்திகள் பின்வருமாறு:
-
சங்க காலம் தமிழ்மக்களின் பொற்காலம்.
-
இக்காலம் அகம், புறம் என்ற அடிப்படையில் அமைந்த தனிச் செய்யுட்களின் காலமாகும்.
-
சங்க காலத்தை வரையறுத்தலில் கருத்து ஒற்றுமை இல்லை. எனினும் கி.பி.முதல் மூன்று நூற்றாண்டுகள் என்பது பலரும் வற்புறுத்தும் கருத்து.
-
மன்னர் சிலர் உதவி பெற்றுச் சான்றோர்கள் இவ்வுதிரிப் பாடல்களைத் தொகுத்தனர்.
-
அகம், புறம் என்ற திணைப்பாகுபாடும், பா வகையும், செய்யுட்களின் அடியளவும் தொகைகள் அமைய அடிப்படைகளாயின.
-
எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்று மொத்தம் 9 தொகுதிகளை உடையது சங்க இலக்கியம்.
-
எட்டுத்தொகை நூல்களை (1) அகம் சார்ந்தன (2) புறம் சார்ந்தன (3) இரண்டும் கலந்தன என்று மூன்று பகுதிகளாகக் காணலாம்.
-
பத்துப்பாட்டிலுள்ளவை (1) அகம் (2) புறம் என்ற இரு பிரிவுகள் அடங்கும். புற இலக்கியங்களுள் ஆற்றுப்படைகள் ஐந்து என்பது குறிக்கத்தக்கது.
-
திருமுருகாற்றுப்படை பாட்டுடைத்தலைவன் பெயரால் அறியப்படுவது தனிச்சிறப்பு.
-
ஒவ்வொரு நூலின் தனித்த பண்புகளையும் அறிந்து கொள்ள முடிந்தது.
-
சங்க இலக்கியங்கட்குரிய சில தனிப்பட்ட பண்புகளை அறிந்து கொண்டோம்.
-