Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் : II
5. பள்ளியர் ஏசலில் சமயம் எவ்வாறு இடம் பெற்றுள்ளது.
பள்ளியர் இருவரும் பூசலிடும்போது ஒருத்தி சிவனையும் மற்றொருத்தி திருமாலையும் ஏசுகிறார்கள். அவர்கள் பூசலில் இருகடவுளர் செயல்களும் கண்டனமாகச் சொல்லப்படுகின்றன. அவர்களின் அவதார நிகழ்ச்சிகள் சொல்லப்படுகின்றன. இறுதியில் பள்ளிகள் இருவரும் சமாதானமாகும் போது கடவுளர் இருவரும் இருவராலும் போற்றப்படுகின்றனர். இவ்வாறு அக்கால வழக்கிலிருந்த சமயப்பூசல் எடுத்துக்காட்டப்பட்டுப் பின் சமயஒற்றுமை வலியுறுத்தப்படுகிறது.