Primary tabs
4.1 ஒருசொல் பலபொருள், ஒருபொருள் பலசொல் ஆகியன குறித்த விளக்கங்கள்
தொல்காப்பியத்தில் சொல்லதிகார உரியியலில், உரிச்சொல்லின் பொது இயல்பையும், பொருள் உணர்த்தும் முறையையும் குறிப்பிடும்போது ஒருசொல் பலபொருள் குறித்தும், ஒருபொருள் பலசொல் குறித்தும் விளக்கமாகத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
“உரிச்சொற் கிளவி..........
ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்
பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும்”
(தொல்.சொல் - 297)என இசை, குறிப்பு, பண்பு எனும் பொருட்கண் பெயர், வினை போலவும், அவற்றின் பகுதியாகவும் தடுமாறி, ஒருசொல் ஒருபொருளுக்கு உரியதாய் வருவதோடு, ஒருசொல் பலபொருட்கும் பலசொல் ஒருபொருட்கும் உரியனவாய் வருவன உரிச்சொற்களாகும் என்கிறார் தொல்காப்பியர்.
உரிச்சொல்லின் இலக்கணத்தைக் கூறும் நன்னூலோ,
“பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி
ஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினை
ஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல்”
(நன்னூல் : உரியியல் : 442)என்று கூறும்போது ஒருகுணம் மற்றும் பலகுணம் தழுவிய சொற்களைப் பற்றியும் பேசுகின்றது. (குணம் = பொருள்) இவற்றிற்குரிய சான்றுகளைப் பின்வரும் தலைப்புகளில் காணலாம்.
4.1.1 ஒரு சொல் ஒருபொருள் குறித்துத் தொல்காப்பியம் தரும் விளக்கம்
நாம் வழங்கும் தமிழ் மொழியில் ஒருசொல் ஒரேயொரு பொருளையும் குறிக்கும். அத்தகைய சொற்களைத் தொல்காப்பியரும் உரியியலில் விளக்கியுள்ளதைச் சில சான்றுகளுடன் காணலாம்.
வ. எண்
சொல்பொருள்சான்று1.உருஅச்சம்உருகெழு கடவுள்2.புரைஉயர்வுபுரைய மன்ற புரையோர் கேண்மை3.உகப்புஉயர்வுவிசும்புகத் தாடாது4.உவப்புஉவகைஉவந்துவந் தார்வ நெஞ்சமோ டாய்நல னளைஇ5.மல்லல்வளமைமல்லல் மால்வரை6.பயப்புபயன்பயவாக் களரனையர் கல்லா தவர்7.பசப்புநிறம்மையில் வாண்முகம் பசப்பூரும்மே8.இயைபுபுணர்ச்சிஇயைந் தொழுகும்9.சீர்த்திமிக்கபுகழ்வயக்கஞ்சால் சீர்த்தி10.பழுதுபயனின்மைபழுதுகழி வாழ்நாள்11.சாயல்மென்மை (பண்பு)சாயன் மார்பு12.முழுதுஎஞ்சாமைமண்முழு தாண்ட13.வம்புநிலையின்மைவம்பு மாரி14.மாதர்காதல்மாதர் நோக்கு15.புலம்புதனிமைபுலிப்பற் கோத்த புலம்பு மணித்தாலி16.துவன்றுநிறைவுஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்17.முரஞ்சல்முதிர்வுசூன்முரஞ் செழிலி வெங்காமம்18.வெம்மைவிரும்புவெங்காமம்19.பொற்புபொலிவுபெருவரையடுக்கம் பொற்ப20.வறிதுசிறிதுவறிதுவடக் கிறைஞ்சிய21.எய்யாமைஅறியாமைஎய்யா மையலை நீயும் வருந்துதி22.தெவ்பகைதெவ்வுப் பலம்23.கருவிதொகுதிகருவி வானம்24.கமம்நிறைவுகமஞ்சூல் மாமழை25.கவர்புவிருப்பம்கவர் நடைப் புரவி26.வியல்அகலம்வியலுலகம்27.வயவலிமைதுன்னருந் துப்பின் வயமான்28.வாள்ஒளிவாண்முகம்29.உயாஉயங்கல (வருந்தல்)பருத்திருந் துயாவிளி30.உசாசூழ்உசாத் துணை31.புனிறுஈன்றணிமைபுனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி32.வயாவேட்கைவயவுறு மகளிர்33.யாணர்புதிதுபடல்மீனொரு பெயரும் யாணரூர34.அமர்தல்மேவல் (விரும்பல்)அகனமர்ந்து செய்யாளுறையும்35.ஐவியப்புஐதே காமம்36.முனைவுமுனிவு (வெறுப்பு)சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்37.வைகூர்மைவை நுனைப் பகழி38.எறுழ்வலிமைபேரெறுழ்த் திணிதோள்4.1.2 ஒருசொல் பலபொருள் குறித்துத் தொல்காப்பியம் தரும் விளக்கம்
மேற்கூறப்பட்ட சொற்களுக்குக் காலப்போக்கில் வேறு பொருட்களும் உருவாகி அவை ஒருசொல் பலபொருள் தரும் சொற்களாக மாறியுள்ளதைக் காணமுடியும். பழந்தமிழ் இலக்கண நூலார் தொல்காப்பியரே, ஒருசொல் பலபொருள் குறித்துத் தெளிவாக விளக்கியுள்ளதைச் சில சான்றுகளின் மூலம் காணலாம்.
வ. எண்சொல்பொருள்சான்று1.தட(i) பெருமைவலிதுஞ்சு தடக்கை(ii) வளைவுதடமருப் பெருமை2.சுய(i) பெருமைகயவாய்ப் பெருங்கை யானை(ii) மென்மைகயந்தலை மடப்பிடி3.நளி(i) பெருமைநளிமலை நாடன்(ii) செறிவுநளியிருள்4.ஏற்றம்(i) நினைவுகானலஞ் சேர்ப்பன் கொடுமை யேற்றி(ii) துணிவுஎற்றேற்றமில்லாருள் யானேற்ற மில்லாதேன்5.பணை(i) பிழைத்தல்பணைத்துவீழ் பகழி(ii) பெருத்தல்வேய்மருள் பணைத்தோள்6.படர்(i) உள்ளல் (நினைத்தல்)வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி(ii) செல்லுதல்கறவை கன்றுவயிற் படர7.தா(i) வலிமைதாவி என்பொன் றைஇய பாவை(ii) வருத்தம்கருங்கட் டாக்கலை பெரும்பிறி துற்றென.8.அழுங்கல்(i) அரவம் (ஆரவாரஒலி)உயவு புணர்ந்தன்றிவ் வழுங் கலூரே(ii) இரக்கம்பழங்கணோட்டமு நலிய வழுங்கின னல்லனோ(iii) கெடுதல்குணனழுங்கக் குற்ற முழை நின்று கூறுஞ் சிறியவர்கட்கு9.செழுமை(i) வளமைசெழும்பல் குன்றம்(ii) கொழுப்புசெழுந்தடி தின்ற நாய்10.விழுமம்(i) சீர்மைவிழுமியோர் காண்டொறுஞ் செய்வர் சிறப்பு(ii) சிறப்புவேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து(iii) இடும்பை (துன்பம்)நின்னுறு விழுமங் களைந்தோன்11.இரங்கல்(i) இசைஏறிரங் கிருளிடை(ii) கழித்தற்கிரங்கும்செய்திரங்கா வினை.12.கறுப்பு(i) வெகுளிநிற்கறுப்பதோ ரருங்கடி முனையள்(ii) நிறப் பொருள்கறுத்த காயா13.சிவப்பு(i) வெகுளிநீசிவந் திறுத்த நீரழி பாக்கம்(ii) நிறப் பொருள்சிவந்த காந்தள்14.நனவு(i) களப் பொருள் (ஆடுகளப் பொருள்)நனவுப்பகு விறலியிற் றோன்றும் நாடன்(ii) அகலப் பொருள்நனந்தலை யுலகம்15.மதவு(i) மடன் (அறியாமை)பதவு மேய்ந்த மதவுநடை நல்லான்(ii) வலிமைகயிறிடு கதச்சேப்போல மதமிக்கு(iii) மிகுதிமதவிடை(iv) வனப்புமாதர் வாண்முக மதைஇய நோக்கே16.கடி(i) வரைவு (நீக்கற்பொருள்)கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு(ii) கூர்மைகடிநுனைப் பகழி(iii) காவற் பொருள்கடிகா(iv) புதுமைப் பொருள்கடிமலர்(v) விரைவுகடுமான்(vi)விளக்கப்பொருள்அருங்கடிப் பெருங்கால்(vii) மிகுதிகடிமுரசியம்ப(viii) சிறப்புப் பொருள்அருங்கடி மாமலை(ix) அச்சப்பொருள்கடியையா னெடுந்தகை செருவத்தானே(x) ஐயப்பொருள்கடுத்தன ளல்லளோ வன்னை(xi) கரிப்பு (காரப்பொருள்)கடிமிளகு தின்ற கல்லா மந்தி4.1.3 ஒருசொல் பலபொருள் குறித்து நன்னூல் தரும் விளக்கம்
‘கடி’ என்ற உரிச்சொல் காவல், கூர்மை, மணம், விளக்கம், அச்சம், சிறப்பு, விரைவு, மிகுதி, புதுமை, ஒலித்தல், நீக்கல், கலியாணம், கரிப்பு ஆகிய பதின்மூன்று குணங்களில் வரும் என்பதை,
“கடிஎன் கிளவி காப்பே கூர்மை
விரையே விளக்கம் அச்சம் சிறப்பே
விரைவே மிகுதி புதுமை ஆர்த்தல்
வரைவே மன்றல் கரிப்பின் ஆகும்”(நன்னூல்: உரியியல் :457)
என நன்னூல் விளக்குகின்றது.
வ. எண்பொருள்சான்று1.காவல்கடிநகர்2.கூர்மைகடிநுனைப் பகழி3.மணம்கடிமாலை4.விளக்கம்கடிமார்பன்5.அச்சம்கடியரமகளிர்6.சிறப்புஅம்பு துஞ்சும் கடியரண்.7.விரவுஎம் அம்பு கடிவிடுதும்8.மிகுதிகடியுண்கடவுட்குஇட்ட செழுங்குரல்9.புதுமைகடிமணச்சாலை10.ஆர்த்தல் (ஒலித்தல்)கடிமுரசு11.வரவு (விலக்குதல்)கடிமது12.மன்றல்கடிவினை முடிகென எண்ணி13.கரிப்புகடி மிளகு