Primary tabs
3.6 தொகுப்புரை
சிவகாமி தான் பிறந்து வளர்ந்த சுற்றுப்புற கிராம மக்களின் வாழ்க்கை நிலைகளை நடப்பியல் நெறியில் கலைத் தன்மையுடன் பதிவு செய்து ஒரு சிறப்பான பங்களிப்பைத் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு வழங்கியிருக்கிறார். இயற்கையோடு இரண்டறக்கலந்த கிராம மக்களின் வாழ்க்கையைக் கூறுவது இவரது தனிச்சிறப்பாகும்.