தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.9 தொகுப்புரை

  • 2.9 தொகுப்புரை

    உரைநடைக் காலமான இருபதாம் நூற்றாண்டில், ஆங்கிலக்கல்வியின் பயனால், தமிழ் உரைநடையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. விளக்கம் தருவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு எழுதப்படுவது விளக்க உரைநடையாகும்.
     

    வருணனை, படிப்போரின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும். எல்லாவகை உரைநடையிலும் வருணனை உண்டு. புறநிலை நோக்குவருணனை காட்சியை உள்ளவாறு அறிவிக்கக் கூடியது.
     

    எடுத்துரை உரைநடை என்பது ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் போன்று கதையையே சொல்வது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    விளக்க உரைநடையின் அடியிழையாக இருப்பது எது?

    2.

    வருணனைக்கும், எடுத்துரைத்தலுக்கும் உள்ள வேறுபாடு யாது?

    3.

    உரைநடை எழுதுவோரின் பொறுப்பு யாது?

    4.

    ஆங்கிலக் கல்வியின் பயனால் ஏற்பட்ட நன்மைகள் யாவை?

    5.

    நாடக உரைநடை எவ்வாறு அமைந்திருக்கும்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 17:54:32(இந்திய நேரம்)