Primary tabs
- 4.6 தொகுப்புரை
நண்பர்களே ! இக்காலச் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான சிற்பியின் கவிதைகள் பற்றிய சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திப் பாருங்கள் :
- சிற்பி என்னும் கவிஞரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
- சிற்பியின் கவிதைப் படைப்புகள் எவை என்பது பற்றிய தகவல்களை அறிய முடிந்தது.
- அவரது கவிதைப் படைப்புக்குப் பொருளாய் அமைந்த உள்ளடக்கங்கள் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.
- அவரது கவிதைகளில் வெளிப்படும் சமூக உணர்வு, அழகியல் உணர்வு, மனித நேயம், இயற்கை நல ஈடுபாடு முதலியவை பற்றி உணர்ந்து கொள்ள முடிந்தது.
- அவரது கவிதைகளில் அமைந்துள்ள சொல்லாட்சி, உவமை, உருவகம் போன்ற இலக்கிய அழகுகளை அறிந்து கொள்ள முடிந்தது.
- சிற்பி என்னும் கவிஞரின் தனித்தன்மையை அவரது கவிதைகள் வழி உணர்ந்து கொள்ள முடிந்தது.
நூல்கள் பட்டியல்- நிலவுப் பூ
- சிரித்த முத்துக்கள்
- ஒளிப்பறவை
- சர்ப்ப யாகம்
- புன்னகை பூக்கும் பூனைகள்
- மௌன மயக்கங்கள்
- சூரிய நிழல்
- இறகு
இந்த நூல்கள் அனைத்தும் :
கோலம் வெளியீடு 50,
அழகப்பா குடி அமைப்பு
பொள்ளாச்சி
6422 001
தமிழ்நாடு.என்னும் முகவரியில் கிடைக்கும்
அல்லதுவிஜயா பதிப்பகம்
20, ராஜவீதி
கோயம்புத்தூர்
தமிழ்நாடுஎன்னும் முகவரியிலும் பெறலாம்.