Primary tabs
-
4.6 பாட முன்னுரை
இதுவரை படித்ததை மீண்டும் ஒரு முறை நினைவுப்படுத்திப்
பாருங்கள் பாவின் இனம் தாழிசை, துறை, விருத்தம் என்ற
மூன்றும் ஆகும். இவ்வினங்களுள் இக்காலத்தில் மிகுதியாகப்
பயன்படுத்தப்படுபவை ஆசிரியவிருத்தம், கலித்துறை,
கலிவிருத்தம் ஆகிய மூன்றும் ஆகும்.
பயில்முறைப் பயிற்சி
கம்பராமாயணம், வில்லிபாரதம் இவை தவிர
விருத்தப்பாவால் ஆன நூல்கள் சிலவற்றைக் குறிப்பிட
முயலுங்கள்.
கோவை இலக்கியங்களில் கட்டளைக் கலித்துறையின்
இலக்கணம் பொருந்துகிறதா என்று ஒப்பி்ட்டுப் பாருங்கள்.