Primary tabs
-
1.7 தொகுப்புரைநண்பர்களே! இப்போது திருமால் வழிபாடு பற்றிய
செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து
என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை
மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.- பழைய தமிழ் இலக்கியங்களான சங்க நூல்களில் திருமால்
பற்றிய குறிப்புகள் அதிகம் காணப்படுவதால், திருமால்
வழிபாடு மிகத் தொன்மையானது என்று அறிந்து
இருப்பீர்கள்.
- திருமால் நெறி ‘வைணவம்’ என்றும், திருமாலை
வழிபடுவோர் ‘வைணவர்’ என்றும் பெயர் பெற்றதற்கான
காரணங்களை விளங்கிக் கொண்டிருப்பீர்கள். ‘பரிபாடல்’
என்னும் பழைய நூலில் திருமால் பற்றிய செய்திகள்
விரிவாக இடம் பெற்றதை அறிந்து இருப்பீர்கள்.
- வைதிக சமயக் கலப்பு ஏற்பட்டதற்குப் பிறகு
திருமாலுக்குரிய வடமொழிப் பெயர்கள் பரிபாடல் போன்ற
நூல்களில் தமிழ்வடிவம் பெற்றதை அறிந்து இருப்பீர்கள்.
- சங்க நூல்களில் காணலாகும் ஐவகையான இறைநிலை
பற்றிய தத்துவக் கருத்துகள், திருமால் பற்றிய அரிய
செய்திகள் போன்றவைகளால் திருமால் வழிபாட்டின்
செல்வாக்கை விரிவாக உணர்ந்து இருப்பீர்கள்.
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாலும் திருமால் வழிபாடு
இடையறாத் தொடர்ச்சியுடையது என்பது உங்களுக்கு
விளங்கியிருக்கும்.
1.திருமாலின் நிறத்திற்கு எவை உவமையாகக்
கூறப்படுகின்றன?2.சங்க நூல்களில் திருமாலை எவ்வாறு
அழைக்கின்றனர்?3.ஆழ்வார் காலத்திற்குப் பின்னர் திருமால் நெறி
எத்தகைய சமயக் கட்டமைப்பைப் பெற்றது? - பழைய தமிழ் இலக்கியங்களான சங்க நூல்களில் திருமால்