Primary tabs
-
3.0 பாடமுன்னுரை
வைணவப் பக்தி இலக்கியங்களுள் தலை சிறந்து விளங்குவது
திவ்வியப் பிரபந்தம் ஆகும். ஆழ்வார்கள் பன்னிருவரும் பாடிய பிரபந்தங்களின் தொகுப்பே இந்நூல். வைணவ சமயச்
சார்புடையதாயினும் இலக்கிய நோக்கில் கற்பார் அனைவரின்
மனத்தையும் கவரும் நூலாக இது திகழ்கின்றது. எனவே
திவ்வியப் பிரபந்தம் என்னும் இப்பாடத்தில் பொதுவாகத் தமிழ்
மாணவர் அறிய வேண்டிய முக்கியமான செய்திகள் பலவும்
தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.