தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உறையூர் முதுகொற்றன்


உறையூர் முதுகொற்றன்

221. முல்லை
அவரோ வாரார்-முல்லையும் பூத்தன;
பறியுடைக் கையர் மறியினத்து ஒழிய,
பாலொடு வந்து கூழொடு பெயரும்
ஆடுடை இடைமகன் சென்னிச்
சூடிய எல்லாம் சிறு பசு முகையே.
பிரிவிடைப் பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது - உரையூர் முது கொற்றன்

390. பாலை
எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்-
செல்லாதீமோ, சிறுபிடி துணையே!-
வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென,
வளை அணி நெடு வேல் ஏந்தி,
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே.
புணர்ந்துடன் போயினாரை இடைச்சுரத்துக் கண்டார் பொழுது செலவும் பகையும் காட்டிச் செலவு விலக்கியது. - உறையூர் முதுகொற்றன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:07:39(இந்திய நேரம்)