தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Muthumozhi Kanchi



பாலாய் நாற்பது அதிகாரங்களாகப் பகுத்து உரையும் இயற்றினர். கடவுள் வாழ்த்தும் அவரே இயற்றியதென்பர்.

2. நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார் இயற்றியது. கடவுள் வாழ்த் துட்பட நூற்றொரு  வெண்பாக்களை யுடையது. ஒவ்வொன்றும் நந்நான்கு பொருளைக் கூறும்.

நானாற்பது

கால மிடம்பொருள் கருதி நாற்பான்
சால வுரைத்தல் நானாற் பதுவே

(இ-ள்.) காலமும் இடமும் பொருளும்பற்றி நாற்பது வெண்பாப் பொருந்த வுரைத்தல் நானாற்பதாம்.

காலம்பற்றி வருவது கார்நாற்பது. இடம்பற்றி வருவது களவழி நாற்பது. பொருள்பற்றி வருவன இன்னாநாற்பது இனியவைநாற்பது. இன்னலாக்குதலை இன்னாவென்றும் இனிமையாக்குதலை இனியவை யென்றுங் கூறினார். (இலக்கண விளக்கம், பாட்டியல் - 91 -சூ)

3. இனியவை நாற்பது - மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் இயற்றியது. இன்ன தின்னது இனிதென்றுரைக்கும் நாற்பது வெண்பாக்களை யுடையது.

4. இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது. இன்ன தின்னது துன்பந்தரும் என்றுரைக்கும் நாற்பது வெண்பாக்களையுடையது.

5. கார்நாற்பது - மதுரைக் கண்ணங் கூத்தனார் இயற்றியது. கார்காலத்து வருவேனென்று வினைமேல் சென்ற தலைவன் வராமையின் தலைவி பிரிவாற்றாமல் வருந்துவதைக் கூறும் நாற்பது வெண்பாக்களை யுடையது.

6.களவழிநாற்பது - பொய்கையார் இயற்றியது. போர்செய்து தோல்வியடைந்த கணைக்காலிரும் பொறையைப் பற்றிப் போய்ச் சோழன் செங்கணான் சிறையிலிட்டபோது பொய்கையார் களம்பாடி வீடுகொண்டார். இந் நூலின் பொருள், மேற்படி போர்க்கள வர்ணனை அங்கங்கே காட்டியிருக்கும் உவமைகள் நிரம்ப அழகானவை.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:29:03(இந்திய நேரம்)