Primary tabs
எங்கும் பெருக வழங்கிப் பொது மக்களிடையில் நிலைபேறான ஓர் இடத்தைப் பெற இயலவில்லை போலும்.
ஐம்பெருங் காவியம்
‘ஐம்பெருங் காவியம்’ என்னும் வழக்கு, தமிழுலகில் நீண்ட காலமாக வேரூன்றி விட்டது. இவ் வழக்கினை எழுத்துருவில் பதித்தவர் இப்பொழுது தெரிகின்ற வரையில் நன்னூலின் ‘முதல் உரையாசிரியராகிய மயிலைநாதரே யாவர். நன்னூல் 387ஆம் நூற்பாவாகிய ‘இன்னது இன்னுழி இன்னணம் இயலும் என்பதன் உரையில்,
என்று உரிச்சொல் வழக்குப் பற்றி உரைக்குமிடத்துக் குறிப்பிட்டுளளார். எனவே,‘ஐம்பெருங் காவியம்’ என்னும் வழக்கு மயிலைநாதரின் காலமாகிய கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டே எழுந்ததாகும் என்பது தெளிவு.
ஐஞ்சிறு காவியம்
ஐம்பெருங் காவியம் என்பது போலவே ‘ஐஞ்சிறு காவியம்’ என்னும் ஒரு வழக்கும் ஒரு சில புலவரால் எடுத்துக் காட்டப்படுகிறது. இது மிக முற்பட்ட வழக்கெனக் கூறவியலாவிடினும் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்களிடையே நிலவியிருந்தது என ஒருவாறு ஊகிக்க முடிகின்றது. தமிழ்நூற் பதிப்பாசிரியர்களுக்கு ஒரு முன்னோடியாய் ஏட்டுச் சுவடிகளிலிருந்து நூல்களை அச்சிடும் கலையில் வல்லவராய், பதிப்பாசிரியர் திலகமாய் விளங்கிய யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் (கி.பி. 1832-1901) தாம் எழுதிய பதிப்புரைகளில் தமிழ் நூல் வரலாறுகளைத் தொகுத்து எழுதியுள்ளார். அவருடைய சூளாமணிப் பதிப்புரையில் ஐஞ்சிறு காவியங்களின் அறிமுகம் உள்ளது. அவர் தரும் விளக்கவுரை வருமாறு.