தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கல்வெட்டு

 
 
கல்வெட்டு :-
 
1020 A.D. இராஜேந்திர சோழர் - 7வது ஆண்டு - தஞ்சை - நன்னிலம் - திருவிடைவாய் - கோயில் முன்வாயிற் சுவரில் உள்ளது; விடையபுரம் என்ற விதராச பயங்கரபுரத்து வியாபாரிகள் சொக்கக்கூத்தர், நாச்சியார், திருஞானம் பெற்ற பிள்ளையார் - பிரதிமைகளைத் தாபித்துப் பூசை நடத்த ஏற்பாடு செய்தது:- இத்தலத்தில்தான் பிள்ளையாரது பதிகங்களுள் முன் கிடைக்காத "மறியார்கரத் தெந்தை" என்ற பதிகம் சுவரில் கல்வெட்டுச் செதுக்கப்பட்டிருந்ததனைப் படியெடுத்து இப்போது பதிப்புக்களிற் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு (1020 கி.ஞி.) சேக்கிழார் பெருமான் காலத்துக்கு முந்தியது.
 
3. தாளம் பெற்றது - (திருக்கோலக்கா)
 
7-ந் திருமுறை நம்பிகள் தேவாரம்:-
 
"நாளு மின்னிசை யாற்றமிழ் பரப்பும்ஞான சம்பந் தனுக்குல கவர்முன்
றாள மீந்தவன் பாடலுக் கிரங்கும் தன்மை யாளனை........."
 

- திருக்கோலக்கா - தக்கேசி - 8

 
11-ம் திருமுறை :-
 
"உறுகின்ற வன்பினோ டொத்திய தாளமும்
" * * * கோலக்காவிற் கரநொடியாற்,
 
நம்பியாண்டார் நம்பிகள்
 
பண்ணார் தரப்பாடு சண்மையர் கோன்பாணி நொந்திடுமென்
றெண்ணா வெழுந்தஞ்சு மிட்ட செம்பொற் றாளங்க ளீய"
 
" * * * போனகந் தாளநன் பொன்சிவிகை
யருந்திட வொத்தமுத் தீசெய வேற வரனளித்த"
 

மேற்படி- 40

 
" * * * ......... பெற்றது
குழகனைப் பாடிக் கோலக் காப்புக்(கு)
அழகுடைச் செம்பொற் றாள மவையே"
 

- ஆளு. பிள். மும்மணிக்கோவை - 4

 
"தாளம் பிரியாத் தடக்கை யசைத்து"
 

- மேற்படி - 19

 
" செம்பொனணி நீடுகிற தாளம் "
 

- மேற்படி திருக்கலம்பகம் - 9

 
குறிப்பு :- திருக்கோலக்காவில் இறைவருக்குத் திருத்தாளமுடையார் - (சத்தபுரீசர் -வடமொழி) என்றும் அப்திக்குத் திருத்தாளமுடையார் கோயில் என்றும், அம்மைக்கு ஓசைகொடுத்த நாயகி என்றும் பெயர்கள் வழங்குகின்றன.
 
 
4. முத்துச் சிவிகை பெற்றது.
 
2-ம் திருமுறை:-
 
"அரத்துறை யடிகடம் மருளே"
 

- பிள். தேவா - பியந்தைக்காந்தாரம் - நெல்வாயிலரத்துறை - 1

 
11-ம் திருமுறை:-
 
"......... ஞானசம் பந்தற்குச் சீர்மணிகள், பொருந்துஞ் சிவிகை
கொடுத்தனன்காண் ... அரத்துறை மேய வரும்பொருளே"
 

- ஆளு. பிள். திருவந்தாதி - 83

 

நம்பியாண்டார் நம்பி

 
" .........ஏறிற்,
றத்தியு மாவுந்தவிர வரத்துறை, முத்தின் சிவிகை முன்னாட், பெற்றே"
 

- ஆளு. பிள். மும்மணிக்கோவை - 4

 
" ......விருத்தனைப் பாடி முத்தின் சிவிகை முன்னாட் பெற்ற
வந்தன்........"
 

- மேற்படி - 28

புதுப்பிக்கபட்ட நாள் : 12-01-2019 13:16:42(இந்திய நேரம்)