1020 A.D. இராஜேந்திர
சோழர் - 7வது ஆண்டு - தஞ்சை - நன்னிலம் -
திருவிடைவாய் - கோயில் முன்வாயிற்
சுவரில் உள்ளது; விடையபுரம் என்ற விதராச
பயங்கரபுரத்து வியாபாரிகள் சொக்கக்கூத்தர்,
நாச்சியார், திருஞானம் பெற்ற பிள்ளையார்
- பிரதிமைகளைத் தாபித்துப் பூசை நடத்த ஏற்பாடு
செய்தது:- இத்தலத்தில்தான் பிள்ளையாரது
பதிகங்களுள் முன் கிடைக்காத "மறியார்கரத்
தெந்தை" என்ற பதிகம் சுவரில் கல்வெட்டுச்
செதுக்கப்பட்டிருந்ததனைப் படியெடுத்து இப்போது
பதிப்புக்களிற் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தக்
கல்வெட்டு (1020 கி.ஞி.) சேக்கிழார் பெருமான்
காலத்துக்கு முந்தியது.
3. தாளம் பெற்றது - (திருக்கோலக்கா)
7-ந் திருமுறை நம்பிகள் தேவாரம்:-
"நாளு மின்னிசை யாற்றமிழ்
பரப்பும்ஞான சம்பந் தனுக்குல
கவர்முன்
றாள மீந்தவன் பாடலுக் கிரங்கும்
தன்மை யாளனை........."
- திருக்கோலக்கா - தக்கேசி - 8
"உறுகின்ற வன்பினோ டொத்திய
தாளமும்
" * * * கோலக்காவிற் கரநொடியாற்,
பண்ணார் தரப்பாடு சண்மையர் கோன்பாணி
நொந்திடுமென்
றெண்ணா வெழுந்தஞ்சு மிட்ட செம்பொற்
றாளங்க ளீய"
" * * * போனகந் தாளநன்
பொன்சிவிகை
யருந்திட வொத்தமுத் தீசெய வேற
வரனளித்த"
" * * * ......... பெற்றது
குழகனைப் பாடிக் கோலக்
காப்புக்(கு)
அழகுடைச் செம்பொற் றாள மவையே"
- ஆளு. பிள். மும்மணிக்கோவை - 4
"தாளம் பிரியாத் தடக்கை யசைத்து"
" செம்பொனணி நீடுகிற தாளம் "
- மேற்படி திருக்கலம்பகம் - 9
குறிப்பு :- திருக்கோலக்காவில்
இறைவருக்குத் திருத்தாளமுடையார் -
(சத்தபுரீசர் -வடமொழி) என்றும் அப்திக்குத்
திருத்தாளமுடையார் கோயில் என்றும்,
அம்மைக்கு ஓசைகொடுத்த நாயகி என்றும்
பெயர்கள் வழங்குகின்றன.
4. முத்துச் சிவிகை பெற்றது.
- பிள். தேவா - பியந்தைக்காந்தாரம் -
நெல்வாயிலரத்துறை - 1
"......... ஞானசம் பந்தற்குச்
சீர்மணிகள், பொருந்துஞ் சிவிகை
கொடுத்தனன்காண் ... அரத்துறை மேய
வரும்பொருளே"
- ஆளு. பிள். திருவந்தாதி - 83
" .........ஏறிற்,
றத்தியு மாவுந்தவிர வரத்துறை,
முத்தின் சிவிகை முன்னாட், பெற்றே"
- ஆளு. பிள். மும்மணிக்கோவை - 4
" ......விருத்தனைப் பாடி முத்தின்
சிவிகை முன்னாட் பெற்ற
வந்தன்........"