பெயர் விளக்கம் (VII பகுதி)
- - - - -
அதிகன் - 3958. கருவூர்ப்பக்கத்தில்
மலையரணத்துள் அரசாண்ட சிற்றரசன்.
புகழ்ச் சோழருக்குத் திறைகொடாது மறுத்துப்
போர்புரிந்து தோற்றோடினன்.
அதிபத்தர் - 3991. அறுபத்துமூன்று
நாயன்மார்களுள் ஒருவர்.
அநபாயன் - 3949. குலோத்துங்கச்சோழர் II.
ஆசிரியரைக்கொண்டு
இப்புராணம் இயற்றுவித்து முறை வகுத்த
பெருமகனார்.
அயிராவதக் களிறு - 3947. இந்திரனது
வெள்ளையானை.
அறுவையர் குலம் - 4193. துணிநெய்வோர்
குலம்; சாலியர் என்பவர்.
ஆதித்தன் புகழ்மரபு - 4111. ஆதித்தச்
சோழர் மரபு.
ஆதிரை நாள் - 3886. சிவனுக்குகந்த நாள்;
திருவாதிரை.
ஆழித்தேர் - 4122. திருவாரூர்த்
தேர்.
இசைஞானிப் பிராட்டியார் - 4288.
நம்பியாரூரருடைய தாயார்.
இடங்கழியார் - 4108. அறுபத்துமூன்று
நாயன்மார்களுள் ஒருவர்.
இருக்குவேளூர் - 4055. கணம்புல்ல நாயனாரது
பதி. வடவெள்ளாற்றுத்
தென்கரையில் உள்ளது. சேலம் சில்லாவில் உள்ளது.
பேளூர் என வழங்குவது.
இருக்குவேள் மன்னர் - (வேளிர்) - 4116.
ஒரு அரச மரபு.
எருத்கத்தம்புலியூர் - 4215. நடுநாட்டுப்
பதி. திருநீலகண்ட யாழ்ப்பாண
நாயனாரது பதி.
ஐயடிகள் காடவர்கோன் - 4015. பல்லவச்சோழர்.
அறுபத்துமூன்று
நாயன்மார்களுள் ஒருவர். சைவத்திருநெறியா
லரசளித்தவர்; அரசாட்சி இன்னலென
இகழ்ந்து துறந்து பதிதோறும் சென்று ஓர் ஓர்
வெண்பாப் பாடினார். அவை
க்ஷேத்திரத் திருவெண்பா என்னும் நூலாகத்
தொடுக்கப்பட்டிருக்கின்றன.
கணநாதர் - 3922. அறுபத்துமூன்று
நாயன்மார்களுள் ஒருவர்.
கணம்புல்லர் - 4083. மேற்படி.
களந்தை - 3930. கூற்றுவ நாயனாரது
பதி.
கமலவதி - 4203. கோச்செங்கட்சோழ நாயனாரது
தாயார்.
கருவூர் - 3953. கொங்குநாட்டுப்பதி.
சோழர்களது தலைநகரங்களுள் ஒன்று.
புகழ்ச்சோழ நாயனார் சரிதம் நிகழ்ந்த பதி.
கலிக்கம்பர் - 4011. அறுபத்துமூன்று
நாயன்மார்களுள் ஒருவர்.
கலிநீதியார் - 4021. மேற்படி