Primary tabs
அமைந்த விளக்க நூல் ஒன்று வெளிவர ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ
சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் திருவுளம் பற்றிய வண்ணம்
இந்நூல் உருவாகியுள்ளது.
இதன் ஆசிரியரான ஸ்ரீ மடத்து ஆஸ்தானத் தமிழ்ப் புலவர்,
செஞ்சொல்மணி, புலவர் திரு. பு. மா. ஜயசெந்தில்நாதன் அவர்கள் திருமுறை
பெற்ற தலங்கட்கு நேரில் சென்று - புகைப்படம் எடுத்து - அங்கு நடைபெற்ற
அற்புதச் செயல்கள் - வழங்கும் செவிவழிச் செய்திகள் - பேருந்து வழிகள் -
அஞ்சல் முகவரி - திருக்கோயில்களைப் பராமரிக்கும் ஆதீனங்களின்
பெயர்கள் - கல்வெட்டுச் செய்திகள் - தலபுராணப் பாடல்கள் -
தனிப்பாடல்கள் - தலங்களுக்கு இன்றுள்ள பெயர்கள் ஆகியவைகளோடு,
கோயில்கள் தோறும் கோபுரவாயில் விநாயகரிலிருந்து சண்டேசுரர் வரை
சிவாலய வழிபாட்டு முறைப்படி நெறிப்படுத்தி விளக்கியிருப்பது நேரில்
சென்று வழிபடுவோர்க்கு உண்டாகும் உள்ளக் கிளர்ச்சியை இதனைப்
படிக்கும் போதே இந்நூல் உருவாக்குகிறது. எதையும் எளிதில் விரைவில்
அறிய விரும்பும் இந்நாட்களில் இதுபோன்ற ஓர் நூல் வேண்டற் பாலதே.
ஆக, இவ்வகை நூல்களுள் இஃது ஓர் தனித்தன்மை பெற்று விளங்குகிறது.
அன்பர்களின் வரவேற்பினால் இரண்டாம் பதிப்பாக வெளிவரும்
இந்நூலால் நாம் பயனை அனைவரும் பெறவும், இதன் ஆசிரியரின் சமயப்
பணிகள் மேன்மேலும் சிறக்கவும் திருவருளைச் சிந்திக்கின்றோம்.
டீ