தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அருட் காவியம்

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் வழங்கிய

வாழ்த்துப் பா

வளர்க நன்றே

மேலுறையும் இறையவனின்
வேத அருட் கடல்முகந்து
மேன்மை ஒங்கச்

சூலுறையும் மேகமெனத்
தூயமழை பொழிந்ததிருத்
தூதர் வாழ்வைப்

பாலுறையும் சுவைத்தமிழில்
பாவியமாய்ப் படைத்தளித்த
பாவின் வள்ளல்

மாலிறையன் நேயமன
மலர்வாசம் வையமெலாம்
வளர்க நன்றே!

அப்துல் ரகுமான்

புதுப்பிக்கபட்ட நாள் : 21-10-2017 15:46:54(இந்திய நேரம்)