Primary tabs
"தாறுமாறாய் மீசையிலஞ்
சாறுமயிரும்--தூங்கற்
சண்ணைக்கடாப் போல் நடையும்
மொண்ணை முகமும்
வேறுகீறி ஒட்ட வைத்த
ஏறுகாதுமாய்--நேமி
வீரனார்முக் கூடற் பண்ணைக்
காரனார் வந்தார்"
என்ற பாட்டு நகைப்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டாதல் காண்க. “எண்வகைச் சுவையே இலக்கியங்கள் கூறும்; சாந்தம் உலகியல் நெறினீங்கினோர்பாற் காணப்படுவது; “அது நெஞ்சாந்து எறியினும் செத்தினும் போழினும், நெஞ்சோர்ந்து ஓடா நிலைமைத் தாகும்” என்று கூறுவாரும் உளர். ஆனால், முக்கூடற் பள்ளு சாந்தத்தையும் கூறுகின்றது.
ஒருத்தியை ஒருத்தி ஏசிக்கொண்டிருக்கும்போதே முக்கூடற் பள்ளி, இளைய பள்ளியைப் பார்த்து,
"பெருமாள் அடியானுக்குப்
பெண்டிருந்துமே--எங்கள்
பெருமாளை நீபழித்துப்
பேசலாமோடி"
என்று கேட்க, இளைய பள்ளி,
"திருமால் அடிமைஎன்றாய் சாலப்பசித்தால்--ஆருந்
தின்னாததுண் டோசினத்தால் சொல்லாததுண்டோ"
என்று கூற, மூத்தபள்ளி,
"தீராண்மைநன் றாகச்சொன்னாய் மருதூர்ப்பள்ளி--போபோ
சினத்தாலும் சீரழியச் சொல்ல லாமோடி"
என்று கூற, இளையபள்ளி,
"வாராதோஎ னக்குக் கோபம்முக் கூடற்பள்ளி--முந்த
வைதவரை வாழ்த்தினவர் வையகத்துண் டோ"
என்று கூற, மூத்தபள்ளி,