Primary tabs

பாற்கே வரினும் அதுவும் உயர்திணையே ஆதல் நோக்கி, ‘உயர்திணை
மருங்கின் நிலையின ஆயினும்’ (57) என்றார்.
அரசு
ஆவது ‘அரசுபடக் கடந்தட்டு’ (கலி.105:1) என உயர்திணை
ஆண்பால் உணர்த்திற்று. ‘பெண் அரசி ஏந்தினள்’ (சீவக. 736) என
ஈறு வேறாயவழிப் பெண்பாலும் உணர்த்தும். இஃது ‘அரசுவா வீழ்ந்த
களத்து’ (களவழி.35) என அஃறிணைக்கும் வரும்.
இனி,
மகவும் குழவியும் ஆவன - ‘குழவியும் மகவும் ஆயிரண்
டல்லவை, கிழவ அல்ல மக்கட்கண்ணே’
(மரபியல் 23) என
அஃறிணைக்கேயன்றி உயர்திணை இருபாற்கும் வரும் என்றார்.
தன்மை திரி பெயர், அலி.
உறுப்பின் கிளவி ஆவன-குருடு, முடம். இவை இருபாற்கும் ஒக்கும்.
விரவுப்பெயர்க்காயின், ‘முடவன், முடத்தி என வரும்.
காதல்
ஆவது - ‘யானை வந்தது, பாவை வந்தது,’ என ஒப்பின்றிக்
காதல் பற்றி நிற்கும். அது, ‘போர்யானை வந்தீக ஈங்கு.’ (கலி. 86:10)
என வரும். ‘தன்னினம் முடித்தலான், ‘தேமலர் அங்கண் திருவே
புகுதக.’ (சீவக. 2121) என உவப்புங் கொள்க.
சிறப்பு
ஆவது - கண்போலச் சிறந்தாரைக் ‘கண்’
என்றலும்,
உயிர்போலச் சிறந்தாரை ‘உயிர்’
என்றலுமாம் அஃது, ‘ஆலமர்
செல்வன் அணிசால் பெரு விறல், போல
வருமெம் உயிர்.’ (கலி.
81:9-10) என வரும்.
செறற்சொல்
ஆவன - செறுதலைப் புலப்படுக்கும் சொல். அவை
பொறியறை, கெழீஇயிலி, போ சீத்தை2 என்றாற் போல்வன. (கலி.94:22)
‘தன்னினம்
முடித்த’லான், ‘ஏவவும் செய்கலான்
தான்தேறான்
அவ்வுயிர், போஒம் அளவுமோர் நோய்