தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   147


    உயர்திணை மருங்கின், ஆக்கம் இல்லை.

    188 நீயிர், நீ' என வரூஉம் கிளவி
    பால் தெரிபு இலவே; உடன்மொழிப் பொருள.

    189 அவற்றுள்,
    `நீ' என் கிளவி ஒருமைக்கு உரித்தே .

    190 ஏனைக் கிளவி பன்மைக்கு உரித்தே.

    191 ஒருவர்' என்னும் பெயர்நிலைக் கிளவி
    இரு பாற்கும் உரித்தே, தெரியும் காலை .

    192 தன்மை கட்டின், பன்மை ஏற்கும்.

    193 இன்ன பெயரே இவை எனல் வேண்டின்,
    முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல்!

    194 மகடூஉ மருங்கின் பால் திரி கிளவி
    மகடூஉ இயற்கை, தொழில்வயினான.

    195 ஆ ஓ ஆகும் பெயருமார் உளவே;
    ஆயிடன் அறிதல், செய்யுளுள்ளே!

    196 இறைச்சிப் பொருள்வயின் செய்யுளுள் கிளக்கும்
    இயற்பெயர்க் கிளவி உயர்திணை சுட்டா;
    நிலத்துவழி மருங்கின் தோன்றலான.

    197 திணையொடு பழகிய பெயர் அலங்கடையே.
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:28:56(இந்திய நேரம்)