தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   252


     

    வர் மலிந்த மூதூர்
    வெறிது சேறல் விழுப்ப மன்றெனக்
    கான வாழைத் தேனுறு கனியும்
    அள்ளிலைப் பலவின் முள்ளுடை யமிர்தமும்
    திரடாண் மாஅத்துத் தேம்படு கனியும்
    வரைதாழ் தேனொ டுகாஅய்விரை சூழ்ந்து
    மணியு முத்து மணிபெற வரன்றிப்
    பணிவில் பாக்கம் பயங்கொண்டு கவரா
    நிறைந்துவந் திழிதரு நீங்காச் செல்வமொடு
    சிறந்த சீர்த்திக் குறிஞ்சி கோலிக்
    கல்லென் சும்மையொடு கார்தலை மணந்த
    முல்லை முதுதிணைச் செல்வ மெய்திப்
    பாலையு நெய்தலும் வேலி யாகக்
    கோல மெய்திக் குறையா வுணவொடு
    துறக்கம் புரியுந் தொல்லையி னியன்றது
    பிறப்பற முயலும் பெரியோர் பிறந்தது
    சிறப்பிடை யறாத தேசிக முடையது
    மறப்பெருந் தகையது மாற்றோ ரில்லது
    விறற்புக ழுடையது வீரிய மமைந்த
    துலகிற் கெல்லாந் திலகம் போல்வ
    தலகை வேந்த னாணை கேட்ப
    தரம்பு மல்லலுங் கரம்பு மில்லது
    செல்வப் பெருங்குடி சிறந்தணி பெற்றது
    நல்குர வாளரை நாடினு மில்லது
    நன்பெரும் புலவர் பண்புளி பன்னிய
    புகழ்ச்சி முற்றா மகிழ்ச்சியின் மலிந்த
    தின்னவை பிறவு மெண்ணுவரம் பிகந்த
    மன்பெருஞ் சிறப்பின் மகதநன் னாடு
    சென்றுசார்ந் தனராற் செம்மலொ டொருங்கென்.
    மன்பெருஞ் சிறப்பின் மகதநன் னாடு
    சென்று சார்ந்தபின் வென்றியிற் பெருகி
    யாறுங் குளனும் வாய்மணந் தோடித்
    தண்டலை தோறுந் தலைபரந் தூட்டி
    வண்டிமிர் பொய்கையும் வாவியுங் கயமும்
    கேணியுங் கிணறு நீணிலைப் படுவும்
    நறுமலர் கஞலி யுறநிமிர்ந்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:52:55(இந்திய நேரம்)