தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   255


     

    உலகப் பல்லுயிர்க் கலகை யாகிப்
    பெருந்தகை வேள்வி யருந்தவப் படிவமொடு
    தந்தொழி றிரியாத் தரும நெஞ்சின்
    அந்தணர் சேரி யகவித ழாக
    இருநில வரைப்பி னெதிர்ப்போ ரின்றி
    அருநிலை யுலகி னாட்சி விறப்பினும்
    பெரும்படைக் கொற்றம் பீடழிந்து சுருங்கா
    அரும்படை மன்ன ராற்றலி னெருங்கத்
    தலைமையின் வழீஇய நிலைமை யெய்தினும்
    உற்றது முடிக்கு முறுதி நாட்டத்துக்
    கற்றுப்பொரு டெரிந்த கண்போற் காட்சி
    அருமதி யமைச்சர் திருமதிற் சேரி
    மாசில் மைந்தாது சுமந்த மத்தகத்
    தாசில் பன்மல ரல்லி யாகச்
    சுடுகதி ரணிந்த சூழ்கதிர்ச் செல்வன்
    விடுசுடர்ப் பேரொளி விமானம் போலச்
    சேணொளி திகழு மாண்வினை மாடம்
    வேண்டிய மருங்கிற் காண்டக நெருங்கிச்
    செஞ்சுடர் மணிமுடி திகழுஞ் சென்னிப்
    பைந்தலை நாகர் பவணங் கடுப்பக்
    காப்பின் றாயினுங் கண்டோ ருட்கும்
    யாப்புடைப் புரிசை யணிபெற வளைஇ
    அருமணிப் பைம்பூ ணரசகத் தடைந்து
    வாயி லணிந்த வான்கெழு முற்றத்துக்
    கோயில் கொட்டை யாகத் தாமரைப்
    பூவொடு பொலியும் பொலிவிற் றாகி
    அமையாச் செய்தொழி லவுணர்க் கடந்த
    இமையாச் செங்க ணிந்திர னுறையும்
    அமரா பதியு நிகர்தனக் கின்றித்
    துன்ப நீக்குந் தொழிலிற் றாகி
    இன்பங் கலந்த விராச கிரியமென்
    றெண்டிசை மருங்கினுந் தன்பெயர் பொறித்த
    மன்பெருஞ் சிறப்பின் மல்லன் மாநகர்
    சாரச் சென்றதன் சீர்கெழு செல்வமும்
    விள்ளா விழுச்சீர் விச்சா தரருறை
    வெள்ளியம் பெருமலை யன்ன விளங்கொளி
    மாட மறுகின் மயங்கொளிக் கழுமலும்
    நீடுபுகழ்க் குருசி னெஞ்சிடை நலிய
    வள்ளிதழ்க் கோ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:53:31(இந்திய நேரம்)