தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   256


     

    தை வாசவ தத்தையை
    உள்ளுபு திருநகர் புக்கன னுலந்தென்
    உள்ளுத லானா துள்ளகஞ் சுருங்கிய
    வள்ளிதழ் நறுந்தார் வத்தவன் றன்னொடு
    விண்ணுற நிவந்த பண்ணமை படைமதில்
    வாயிலு மருங்கிலுங் காவல் கண்ணி
    வேந்துபிழைத் தொழுகினுங் காய்ந்து கலக்கறாஅ
    முழுப்பரி சார முதற்க ணெய்தி
    விழுப்பெருஞ் செல்வமொடு வென்றி தாங்கிய
    ஐம்பதி னிரட்டி யவனச் சேரியும்
    எண்பதி னிரட்டி யெறிபடைப் பாடியும்
    அளப்பருஞ் சிறப்பி னாயிர மாகிய
    தலைப்பெருஞ் சேனைத் தமிழச் சேரியும்
    கொலைப் பெருங் கடுந்திறற் கொல்லர் சேரியும்
    மிலைச்சச் சேரியுந் தலைத்தலை சிறந்து
    வித்தக வினைஞர் பத்தியிற் குயிற்றிய
    சித்திர சாலையு மொத்தியைந் தோங்கிய
    ஒட்டுவினை மாடமுங் கொட்டுவினைக் கொட்டிலும்
    தண்ணீர்ப் பந்தருந் தகையமை சாலையும்
    அறத்தியல் கொட்டிலு மம்பலக் கூடமும்
    மறப்போர்க் கோழி மரபிற் பொருத்தும்
    விறற்போ ராடவர் விரும்பிய கண்ணும்
    மறக்களி யானை வடிக்கும் வட்டமும்
    கடிசெல் புரவி முடுகும் வீதியும்
    அடுத்தொலி யறாஅ வரங்கமுங் கழகமும்
    அறச்சோற் றட்டிலு மம்பலச் சாலையும்
    தேவகுலனுந்தேசிகப்பாடியும்
    மாவுந்தேருமயங்கிய மறுகும்
    காவுந் தெற்றியுங் கடவுட் பள்ளியும்
    தடவளர் செந்தீ முதல்வர் சாலையும்
    வேண்டிடந் தோறுங் காண்டக நெருங்கி
    ஆதி யாகியமைந்தவனப் பெய்தி
    மயங்கிய மாந்தர்த் தாகி யார்க்கும்
    இயங்குதற் கின்னாப் புறம்பணைச் சேரியும்
    அந்தண் பாடியு மணுகி யல்லது
    வெந்திறல் வேகமொடு விலக்குதற் கரிய
    ஐங்கணைக் கிழவ னமர்ந்துநிலை பெற்ற
    எழுதுவினைத்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:53:43(இந்திய நேரம்)