தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   257


     

    திருநக ரெழிலுற வெய்தி
    இட்டிகைப் படுகாற் குட்டக் கோணத்
    துத்தர மருங்கி னத்தினஞ் சொரிந்த
    மணிதெளித் தன்ன வணிநிறத் தெண்ணீர்ப்
    பெருந்தண் பொய்கை மருங்கிற் குலாஅய்ச்
    சேறுபடு செறுவி னாறுநடு கடைசியர்
    கழிப்புநீ ராரலொடு கொழுப்பிறாக் கொளீஇய
    நாரைச் சேவல் பார்வலொடு வதிந்த
    எழிற்பூம் புன்னைப் பொழிற்புடை நிவந்த
    வள்ளிதழ்த் தாமரை வான்போ துளரி
    முழுத்திரட் டெங்கின் விழுக்குலை நெற்றி
    அகமடல் வதிந்த வன்புபுரி பேடை
    நரல்குர லோசை யளைஇ யயல
    கணைக்காற் கமுகி னிணைப்பொதி யவிழ்ந்த
    அம்மென் பாளையு ளசைந்த வண்டினம்
    மம்மர் வைகறை மருங்குதுயி லேற்ற
    அனந்தர் முரற்சி யளைஇப் புதைந்த
    பூங்கண் முற்றிய புறத்துப் புடை யாடித்
    தேங்கட் டும்பி தீங்குழ லிசைப்ப
    இயல்பிற் கெழீஇய வின்றுணைப் பிரிந்தோர்க்
    குயலரி தாக வூழூழ் கவற்றும்
    வயலுந் தோட்டமு மயல்பல கெழீஇய
    தாமரைச் செங்கட் டமனிய விணைக்குழைக்
    காமன் கோட்டத்துக் கைப்புடை நிவந்த
    இளமரக் காவி னிணைதனக் கில்லாத்
    தூபத் தொழுக்கத் தாபதப் பள்ளி
    தமக்கிட மாக வமைத்த பின்றை
    வீழ்துணை மாதர் விளியுநினைந் திரங்கி
    வாழ்த லாற்றான் வாய்மொழி யரசன்
    உற்றவ னாருயி ருய்தல் வேண்டி
    இற்றவள் பிறந்துழிக் காட்டு மந்திரம்
    கற்றுவினை நவின்றனென் காட்டுவெ னினக்கென
    வஞ்ச மாயினு நெஞ்சுவலி யுறுக்கெனக்
    கண்கவர் பேரொளிக் காகதுண் டகனெனும்
    அந்த ணாளனை யமைச்சர் தருதலின்
    அருமதி யண்ணற் கவனிது கூறும்
    இருமதி யெல்லை யியைந்த விரதமொ
    டிரக்க மின்றி யிருக்கல் வேண்டும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:53:56(இந்திய நேரம்)