Primary tabs
-
பெருங்கதைஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
மன்னவன்
தணியா வேகத்துத் தருசகன் றங்கை
பசும்பொற் கிண்கிணி பரடுசுமந் தரற்ற
அசும்பம றாமரை யலைத்த வடியினள்
சிறுபிடித் தடக்கையிற் செறிவொடு புணர்ந்து
மென்மையி னியன்று செம்மைய வாகி
நண்புவீற் றிருந்த நலத்தகு குறங்கினள்
மணியும் பவழமு மணிபெற நிரைஇய
செம்பொற் பாசிழை செறிய வீக்கிய
பைந்துகி லணிந்த பரவை யல்குலள்
துடிதோங் கூறிய விடுகிய நடுவிற்குப்
பார மாகிய வீரத் தானையள்
ஊக்க வேந்த னாக்கம் போல
வீக்கங் கொண்டு வெம்மைய வாகி
இலைப்பூண் டிளைக்கு மேந்திள முலையள்
திலதஞ் சுடருந் திருமதி வாண்முகத்
தலரெனக் கிடந்த மதரரி மழைக்கட்
கதிர்வளைப் பணைத்தோட் கனங்குழைக் காதிற்
புதுமலர்க் கோதை புனையிருங் கூந்தற்
பதுமா பதியெனும் பைந்தொடிக் கோமகள்
கன்னி யாயந் துன்னுபு சூழ
மதிற்புறங் கவைஇய புதுப்பூங் காவின்
மகர வெல்கொடி மகிழ்கணைக் காமற்கு
நகரங் கொண்ட நாளணி விழவினுள்
எழுநா டோறுங் கழுமிய காதலொடு
வழிபா டாற்றிய போதரு மின்றென
அழிகவுள் வேழத் தணியெருத் தேற்றிய
இடியுமிழ் முரசி னிருங்கண் டாக்கி
வடிவேற் கொற்றவன் வாழ்கெனப் பல்லூழ்
அணித்திரட் கந்தின் மணிப்பொற் பலகைச்
சித்திர முதுசுவர் வித்தக வேயுள்
ஆவணந் தோறு மறைந்தறி வுறுத்தலின்
இடையற வில்லாக் கடைமுத றோறும்
கைவ லோவியர் மெய்பெற வெழுதிய
உருவப் பூங்கொடி யொசிய வெடுத்துத்
தெருவு மந்தியுந் தெய்வச் சதுக்கமும்
பழமண னீக்கிப் புதுமணற் பரப்பி
விண்மிசை யுலகின் விழவமைந் தாங்கு
மண்மிசை யுலகின் மன்னிய சீர்த்தி
முழவு