தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   259


     

    மன்னவன்
    தணியா வேகத்துத் தருசகன் றங்கை
    பசும்பொற் கிண்கிணி பரடுசுமந் தரற்ற
    அசும்பம றாமரை யலைத்த வடியினள்
    சிறுபிடித் தடக்கையிற் செறிவொடு புணர்ந்து
    மென்மையி னியன்று செம்மைய வாகி
    நண்புவீற் றிருந்த நலத்தகு குறங்கினள்
    மணியும் பவழமு மணிபெற நிரைஇய
    செம்பொற் பாசிழை செறிய வீக்கிய
    பைந்துகி லணிந்த பரவை யல்குலள்
    துடிதோங் கூறிய விடுகிய நடுவிற்குப்
    பார மாகிய வீரத் தானையள்
    ஊக்க வேந்த னாக்கம் போல
    வீக்கங் கொண்டு வெம்மைய வாகி
    இலைப்பூண் டிளைக்கு மேந்திள முலையள்
    திலதஞ் சுடருந் திருமதி வாண்முகத்
    தலரெனக் கிடந்த மதரரி மழைக்கட்
    கதிர்வளைப் பணைத்தோட் கனங்குழைக் காதிற்
    புதுமலர்க் கோதை புனையிருங் கூந்தற்
    பதுமா பதியெனும் பைந்தொடிக் கோமகள்
    கன்னி யாயந் துன்னுபு சூழ
    மதிற்புறங் கவைஇய புதுப்பூங் காவின்
    மகர வெல்கொடி மகிழ்கணைக் காமற்கு
    நகரங் கொண்ட நாளணி விழவினுள்
    எழுநா டோறுங் கழுமிய காதலொடு
    வழிபா டாற்றிய போதரு மின்றென
    அழிகவுள் வேழத் தணியெருத் தேற்றிய
    இடியுமிழ் முரசி னிருங்கண் டாக்கி
    வடிவேற் கொற்றவன் வாழ்கெனப் பல்லூழ்
    அணித்திரட் கந்தின் மணிப்பொற் பலகைச்
    சித்திர முதுசுவர் வித்தக வேயுள்
    ஆவணந் தோறு மறைந்தறி வுறுத்தலின்
    இடையற வில்லாக் கடைமுத றோறும்
    கைவ லோவியர் மெய்பெற வெழுதிய
    உருவப் பூங்கொடி யொசிய வெடுத்துத்
    தெருவு மந்தியுந் தெய்வச் சதுக்கமும்
    பழமண னீக்கிப் புதுமணற் பரப்பி
    விண்மிசை யுலகின் விழவமைந் தாங்கு
    மண்மிசை யுலகின் மன்னிய சீர்த்தி
    முழவு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:54:21(இந்திய நேரம்)