தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   260


     

    மலி திருநகர் விழவுவினை தொடங்க
    அரும்பொறி நுனித்த யவனக் கைவினைப்
    பெரும்பொறி வையத் திருந்தியாப் புறீஇ
    மங்கலச் சாந்தின் மலர்க்கொடி யெழுதிப்
    பைம்பொற் பத்திரம் புளகமொடு வீக்கிக்
    கதிர்நகைத் தாம மெதிர்முக நாற்றிப்
    பத்திர மாலை சித்திர மாகப்
    புடைப்புடை தோறுந் தொடக்கொடு தூக்கிக்
    கட்டி தோய்த்த காழகி னறும்புகை
    பட்டுநிணர் கட்டிற் பல்படை குளிப்ப
    உள்ளக மருங்கின் விள்ளாக் காதற்
    றுணைநலத் தோழியர் துப்புர வடக்கி
    அணிநலத் தோழிக் கமைந்தன வியற்றி
    நெய்ந்நிறங் கொண்ட பைந்நிற மஞ்சளின்
    வைம்மருப் பணிபெற வண்ணங் கொளீஇக்
    கைவினைக் கண்ணி கவின்பெறச் சூட்டித்
    தகைமலர்ப் பொற்றார் வகைபெற வணிந்து
    காண்டகு வனப்பிற் காலியற் செலவிற்
    பாண்டில் வையம் பண்ணிப் பாகன்
    கோலுடைக் கையிற் கூப்புவன னிறைஞ்சி
    வையம் வந்து வாயி னின்றமை
    தெய்வ மாதர்க் கிசைமின் சென்றென
    இசைத்த மாற்றத் துரைப்பெதிர் விரும்பிப்
    போதுவிரி தாமரைத் தாதகத் துறையும்
    தீதுதீர் சிறப்பிற் றிருமக ளாயினும்
    உருவினு முணர்வினு மொப்புமை யாற்றாத்
    தெரியிழை யல்குற் றேமொழிக் குறுமகள்
    பாவையும் பந்துங் கழங்கும் பசும்பொற்
    றுதையு முற்றிலும் பேதை மஞ்ஞையும்
    கிளியும் பூவையுந் தெளிமணி யடைப்பையும்
    கவரியுந் தவிசுங் கமழ்புகை யகிலும்
    சாத்துக் கோயும் பூத்தகைச் செப்பும்
    இன்னவை பிறவு மியைய வேந்தி
    வண்ண மகளிர் வழிநின் றேத்திச்
    செண்ணச் சேவடி போற்றிச் சேயிழை
    மென்மெல விடுகெனப் பன்முறை பணிய
    ஒண்செங் காந்தட்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:54:33(இந்திய நேரம்)