தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Perungkatai

  • ஓலை எண் : 

  • பெருங்கதை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   272


     

    சாந்தின் வள்ளி யெழுதிய
    வயந்தக குமரன் வரைபுரை யகலத்
    தசைந்த தோள னாகி யொருகையுட்
    டாரகம் புதைத்த தண்மலர் நறும்பைந்
    தூழறிந் துருட்டா வொருசிறை நின்றுழிப்
    பந்தவன் செங்கை பயில்வது நோக்கி
    அந்தண வுருவொடு வந்தவ ணின்றோன்
    யார்கொ லவனை யறிதி யோவெனப்
    பாவை வினவப் பணிந்தவ ளுரைக்கும்
    அடிகள் போக யானு மொருநாள்
    ஒடியாப் பேரன் புள்ளத் தூர்தர
    ஆண முடைத்தாக் கேட்டனெ னவனை
    மாணக னென்போன் மற்றிந் நாடு
    காண லுறலொடு காதலின் வந்தோன்
    மறையோம் பாளன் மதித்தன னாகித்
    தானுந் தோழருந் தான நசைஇ
    நின்றனர் போகா ரென்றவட் குரைப்பப்
    பல்வகை மரபிற் பந்துபுனைந் துருட்டுதல்
    வல்லவன் மற்றவன் கைவயிற் கொண்டது
    புறத்தோ ரறியாக் குறிப்பி னுணர்த்தி
    நமக்கு வேண்டென நலத்தகை கூறக்
    கண்ணினுங் கையினுங் கண்ணிய துணர்த்திப்
    பெருந்தகை யண்ண றிருந்துமுக நோக்கி
    நின்கைக் கொண்ட பூம்பந் தென்கை
    ஆய்வளைத் தோளிக் கீக்க வென்ன
    அங்கை யெற்றிச் செங்கணிற் காட்டிய
    கூன்மகள் குறிப்புத் தான்மனத் தடக்கித்
    தன்வயிற் றாழ்ந்த தைய னிலைமை
    இன்னுயிர்த் தோழர்க் கிசைத்தல் வேண்டி
    மந்திரச் சூழ்ச்சியுள் வெந்திறல் வீரன்
    வள்ளிதழ்க் கோதை வாசவ தத்தையை
    உள்வழி யுணரா துழலுமென் னெஞ்சினைப்
    பல்லிதழ்க் கோதைப் பதுமா பதியெனும்
    மெல்லியற் கோமகண் மெல்லென வாங்கித்
    தன்பால் வைத்துத் தானுந் தன்னுடைத்
    திண்பா னெஞ்சினைத் திரிதலொன் றின்றி
    என்னுழை நிறீஇத் திண்ணிதிற் கலந்த
    காம வேட்கைய டானெனக் கூற

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 20:57:02(இந்திய நேரம்)