முகப்பு |
காந்தள் (கோடல், தோன்றி) |
14. பாலை |
தொல் கவின் தொலைய, தோள் நலம்சாஅய, |
||
நல்கார் நீத்தனர்ஆயினும், நல்குவர்; |
||
நட்டனர், வாழி!-தோழி!-குட்டுவன் |
||
அகப்பா அழிய நூறி, செம்பியன் |
||
5 |
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது |
|
அலர் எழச் சென்றனர் ஆயினும்-மலர் கவிழ்ந்து |
||
மா மடல் அவிழ்ந்த காந்தள்அம் சாரல், |
||
இனம் சால் வயக் களிறு பாந்தட் பட்டென, |
||
துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல் |
||
10 |
நெடு வரை விடரகத்து இயம்பும் |
|
கடு மான் புல்லிய காடு இறந்தோரே. | உரை | |
இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிந்தது.- மாமூலனார்
|
17. குறிஞ்சி |
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து, |
||
மால் கடல் திரையின் இழிதரும் அருவி |
||
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி, |
||
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு |
||
5 |
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை, |
|
'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என, |
||
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து, |
||
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து, |
||
உரைத்தல் உய்ந்தனனே-தோழி!-சாரல், |
||
10 |
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி |
|
தீம் தொடை நரம்பின் இமிரும் |
||
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே. | உரை | |
முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லியது.-நொச்சிநியமங்கிழார்
|
29. பாலை |
நின்ற வேனில் உலந்த காந்தள் |
||
அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது, |
||
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென, |
||
மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய, |
||
5 |
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி |
|
யாங்கு வல்லுநள்கொல்தானே-யான், 'தன் |
||
வனைந்து ஏந்து இள முலை நோவகொல்!' என |
||
நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன் |
||
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ, |
||
10 |
வெய்ய உயிர்க்கும் சாயல், |
|
மை ஈர் ஓதி, பெரு மடத்தகையே? | உரை | |
மகள்போக்கிய தாய்சொல்லியது.- பூதனார்
|
34. குறிஞ்சி |
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த |
||
பறியாக் குவளை மலரொடு காந்தள் |
||
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி, |
||
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள் |
||
5 |
அருவி இன் இயத்து ஆடும் நாடன் |
|
மார்பு தர வந்த படர் மலி அரு நோய் |
||
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து, |
||
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி, |
||
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்! |
||
10 |
கடவுள் ஆயினும் ஆக, |
|
மடவை மன்ற, வாழிய முருகே! | உரை | |
தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.-பிரமசாரி
|
85. குறிஞ்சி |
ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும், |
||
வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும், |
||
அம்பல் மூதூர் அரவம் ஆயினும், |
||
குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக் |
||
5 |
கன்றுடை வேழம் நின்று காத்து அல்கும், |
|
ஆர் இருள் கடுகிய, அஞ்சு வரு சிறு நெறி |
||
வாரற்கதில்ல-தோழி!-சாரல் |
||
கானவன் எய்த முளவு மான் கொழுங் குறை, |
||
தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி, கிழங்கொடு |
||
10 |
காந்தள்அம் சிறுகுடிப் பகுக்கும் |
|
ஓங்கு மலை நாடன், நின் நசையினானே! | உரை | |
தலைவன் வரவு உணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.-நல்விளக்கனார்
|
99. முல்லை |
'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை, |
||
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின், |
||
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர் |
||
தாம் வரத் தெளித்த பருவம் காண்வர |
||
5 |
இதுவோ?' என்றிசின்-மடந்தை!-மதி இன்று, |
|
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை |
||
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல் |
||
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல- |
||
பிடவமும், கொன்றையும் கோடலும்- |
||
10 |
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே. | உரை |
பருவம் கண்டு ஆற்றாளாய தலைவியைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறுத்தியது.-இளந்திரையனார்
|
161. முல்லை |
இறையும், அருந் தொழில் முடித்தென, பொறைய, |
||
கண் போல் நீலம் சுனைதொறும் மலர, |
||
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின், |
||
இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய, |
||
5 |
நெடுந் தெரு அன்ன நேர் கொள் நெடு வழி, |
|
இளையர் ஏகுவனர் பரிப்ப, வளை எனக் |
||
காந்தள் வள் இதழ் கவிகுளம்பு அறுப்ப, |
||
தோள் வலி யாப்ப, ஈண்டு நம் வரவினைப் |
||
புள் அறிவுறீஇயினகொல்லோ-தெள்ளிதின் |
||
10 |
காதல் கெழுமிய நலத்தள், ஏதில் |
|
புதல்வற் காட்டிப் பொய்க்கும் |
||
திதலை அல்குல் தேம் மொழியாட்கே? | உரை | |
வினை முற்றிப் பெயரும்தலைவன், தேர்ப்பாகன் கேட்ப, சொல்லியது.
|
173. குறிஞ்சி |
சுனைப் பூக் குற்றும், தொடலை தைஇயும், |
||
மலைச் செங் காந்தட் கண்ணி தந்தும், |
||
தன் வழிப் படூஉம் நம் நயந்தருளி, |
||
வெறி என உணர்ந்த அரிய அன்னையை, |
||
5 |
கண்ணினும் கனவினும் காட்டி, 'இந் நோய் |
|
என்னினும் வாராது; மணியின் தோன்றும் |
||
அம் மலை கிழவோன் செய்தனன் இது' எனின், |
||
படு வண்டு ஆர்க்கும் பைந் தார் மார்பின் |
||
நெடு வேட்கு ஏதம் உடைத்தோ?- |
||
10 |
தொடியோய்! கூறுமதி, வினவுவல் யானே. | உரை |
தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது; வெறி அச்சுறீஇத் தோழி அறத்தொடு நிலை பயப்பித்ததூஉம் ஆம்.
|
176. குறிஞ்சி |
எம் நயந்து உறைவி ஆயின், யாம் நயந்து |
||
நல்கினம் விட்டது என்? நலத்தோன் அவ் வயின் |
||
சால்பின் அளித்தல் அறியாது, 'அவட்கு அவள் |
||
காதலள் என்னுமோ?' உரைத்திசின்-தோழி!- |
||
5 |
நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் |
|
போது பொதி உடைந்த ஒண் செங் காந்தள் |
||
வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ, |
||
யாழ் ஓர்த்தன்ன இன் குரல் இன வண்டு, |
||
அருவி முழவின் பாடொடு ஒராங்கு, |
||
10 |
மென்மெல இசைக்கும் சாரல், |
|
குன்ற வேலித் தம் உறைவின் ஊரே. | உரை | |
பரத்தை தலைவியின் பாங்கிக்குப் பாங்காயினார் கேட்ப, விறலிக்குச் சொல்லியது.
|
185. குறிஞ்சி |
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி, |
||
காமம் கைம்மிக, கையறு துயரம் |
||
காணவும் நல்காய் ஆயின்-பாணர் |
||
பரிசில் பெற்ற விரி உளை நல் மான் |
||
5 |
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி, |
|
இரவலர் மெலியாது ஏறும், பொறையன் |
||
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின், |
||
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து, |
||
பறவை இழைத்த பல் கண் இறாஅல் |
||
10 |
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய |
|
வினை மாண் பாவை அன்னோள் |
||
கொலை சூழ்ந்தனளால்-நோகோ யானே. | உரை | |
பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.
|
188. குறிஞ்சி |
படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் |
||
கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை, |
||
ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் |
||
மெல் விரல் மோசை போல, காந்தள் |
||
5 |
வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப! |
|
'நன்றி விளைவும் தீதொடு வரும்' என, |
||
அன்று நற்கு அறிந்தனள் ஆயின், குன்றத்துத் |
||
தேம் முதிர் சிலம்பில் தடைஇய |
||
வேய் மருள் பணைத் தோள் அழியலள்மன்னே. | உரை | |
பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
|
221. முல்லை |
மணி கண்டன்ன மா நிறக் கருவிளை |
||
ஒண் பூந் தோன்றியொடு தண் புதல் அணிய, |
||
பொன் தொடர்ந்தன்ன தகைய நன் மலர்க் |
||
கொன்றை ஒள் இணர் கோடுதொறும் தூங்க, |
||
5 |
வம்பு விரித்தன்ன செம் புலப் புறவில், |
|
நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழ, |
||
செல்க-பாக!-நின் செய்வினை நெடுந் தேர்: | ||
விருந்து விருப்புறூஉம் பெருந் தோட் குறுமகள், |
||
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க, |
||
10 |
நடை நாட் செய்த நவிலாச் சீறடிப் |
|
பூங் கட் புதல்வன் உறங்குவயின் ஒல்கி, |
||
'வந்தீக, எந்தை!' என்னும் |
||
அம் தீம் கிளவி கேட்கம் நாமே. | உரை | |
வினை முற்றி மறுத்தராநின்ற தலைமகன் பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
|
294. குறிஞ்சி |
தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு, |
||
நோயும் இன்பமும் ஆகின்றுமாதோ; |
||
மாயம் அன்று-தோழி!-வேய் பயின்று, |
||
எருவை நீடிய பெரு வரைஅகம்தொறும், |
||
5 |
தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் |
|
கொன்ற யானைக் கோடு கண்டன்ன, |
||
செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் |
||
சிலம்புடன் கமழும் சாரல் |
||
இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே! | உரை | |
மணமனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.- புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்
|
313. குறிஞ்சி |
கருங் கால் வேங்கை நாள் உறு புதுப் பூ, |
||
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப, |
||
தகை வனப்புற்ற, கண்ணழி கட்டழித்து, |
||
ஒலி பல் கூந்தல் அணி பெறப் புனைஇ, |
||
5 |
காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்கு |
|
யாங்கு ஆகுவம்கொல்?-தோழி!-காந்தள் |
||
கமழ் குலை அவிழ்ந்த நயவருஞ் சாரல் |
||
கூதள நறும் பொழில் புலம்ப, ஊர்வயின் |
||
மீள்குவம் போலத் தோன்றும்-தோடு புலர்ந்து |
||
10 |
அருவியின் ஒலித்தல் ஆனா, |
|
கொய்பதம் கொள்ளும், நாம் கூஉம் தினையே. | உரை | |
தோழி சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய், புனம் அழிவு உரைத்து,செறிப்பு அறிவுறீஇயது.-தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
|
355. குறிஞ்சி |
புதல்வன் ஈன்ற பூங் கண் மடந்தை |
||
முலை வாய் உறுக்கும் கை போல், காந்தட் |
||
குலைவாய் தோயும் கொழு மடல் வாழை |
||
அம் மடல் பட்ட அருவித் தீம் நீர் |
||
5 |
செம் முக மந்தி ஆரும் நாட! |
|
முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின், |
||
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்; |
||
அம் சில் ஓதி என் தோழி தோட் துயில் |
||
நெஞ்சின் இன்புறாய்ஆயினும், அது நீ |
||
10 |
என் கண் ஓடி அளிமதி- |
|
நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே! | உரை | |
தோழி அருகு அடுத்தது; தோழி தலைமகளது ஆற்றாமை கண்டு வரைவு கடாயதூஉம் ஆம்.
|
399. குறிஞ்சி |
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து, |
||
குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள் |
||
வரி அணி சிறகின் வண்டு உண மலரும் |
||
வாழை அம் சிலம்பில், கேழல் கெண்டிய |
||
5 |
நிலவரை நிவந்த பல உறு திரு மணி |
|
ஒளி திகழ் விளக்கத்து, ஈன்ற மடப் பிடி, |
||
களிறு புறங்காப்ப, கன்றொடு வதியும் |
||
மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் |
||
பெருமை உடையள் என்பது |
||
10 |
தருமோ-தோழி!-நின் திரு நுதல் கவினே? | உரை |
நெடுங்காலம் வந்து ஒழுக ஆற்றாமை வேறுபட நின்ற தலைமகளைத் தோழி, 'எம்பெருமான் இதற்காய நல்லது புரியும்' என்று தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது.'இதற்காய நல்லது புரியும் பெருமான் திறம் வேண்டும்' என்றாட்குத் தலைமகள் சொல
|