தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

குறுங்காப்பியங்கள்

  • 6.1 குறுங்காப்பியங்கள்

    இதிகாசங்களிலும் காப்பியங்களிலும் இடம்பெற்றுள்ள ஒரு கிளைக்கதை அல்லது ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு காவிய மாந்தர் இறவா வரம் பெற்று உலகில் நின்று நிலவுவது உண்டு. காலத்திற்குக் காலம், கால மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு படைப்பாளிகள் அந்தக் கிளைக்கதைகளையோ நிகழ்ச்சிகளையோ காவிய மாந்தர்களையோ மறுபடைப்பிற்கு உட்படுத்துவது உண்டு. பாரதியின் பாஞ்சாலி சபதம் அத்தகைய மறுபடைப்பாகும். அவ்வாறே வான்மீகியின் இராமாயணத்தில் உள்ள அகலிகையை வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாரும், பாலபாரதி ச.து.சு.யோகியாரும் புதிய வார்ப்பில் உருவாக்கியுள்ளனர். தமிழ்ஒளி வீராயி என்னும் குறுங்காப்பியத்தின் வழியாக முதலாளித்துவத்தின் கொடுமையையும் சாதியக் கொடுமையையும் வெளிப்படுத்தியுள்ளார். இம்மூன்று குறுங்காப்பியங்களும் பழமையையும் புதுமையையும் இணைக்கும் பாலமாக இருப்பதைக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 13:22:49(இந்திய நேரம்)