தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- தொகுப்புரை

  • 3.5 தொகுப்புரை

    இப்பாடத்தில் வரலாற்றிற்கு முந்தைய தமிழகம் எவ்வாறு இருந்து எவ்வாறாக மாறியது என்பது விளக்கப்பட்டது.

    இலெமூரியாக் கண்டம் என்ற ஒரு கண்டம் எவ்வாறு அமையப் பெற்றிருந்தது என்பதனை அறிந்தீர்கள். மேலும் பழந்தமிழகத்தின் பிரிவுகள் பற்றியும் அறிந்தீர்கள்.

    தமிழகத்தின் புவியியல் அமைப்பைப் பற்றியும், சங்க இலக்கியங்களில் பழந்தமிழர் நிலப்பரப்பை எவ்வாறு எல்லாம் பிரித்துப் பார்த்தனர் என்பது பற்றியும் படித்து உணர்ந்து கொண்டீர்கள்.

    பாலை என்ற ஒரு நிலப்பரப்பு இல்லை என்றும், குறிஞ்சி, முல்லை நிலப்பரப்புகள் வறட்சியை எய்தும்போது பாலை எனப் பாகுபடுத்திப் பார்த்தனர் பழந்தமிழர் என்றும் அறிந்து கொண்டீர்கள்.

    இவற்றையெல்லாம் விட, பழந்தமிழர் அறிவில் வளர்ச்சியுற்று இருந்தனர் என்றும், நாகரிகப் பாதையில் பழந்தமிழகம் இருந்து வந்தது என்பது பற்றியும் படித்து உணர்ந்தீர்கள்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    வரலாற்றிற்கு முந்தைய தமிழகம் கலாச்சார அடிப்படையில் எந்த எந்த நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தது ?
    2.
    தார்ப்பாலைவனம் எங்கு அமைந்திருக்கிறது ?
    3.
    பழந்தமிழர் கால நிலையை எத்தனை பிரிவுகளாகப் பிரித்தனர் ?
    4.
    காவிரியாற்றினைப் பயன்படுத்தி எந்த மன்னர் எழுச்சி பெற்றனர் ?
    5.
    பாண்டியர் எந்த ஆறுகளைக் கொண்டு எழுச்சியுற்றனர் ?
    6.
    பழந்தமிழர் மலையையும், மலை சார்ந்த இடத்தையும் எவ்வாறு அழைத்தனர் ?
    7.
    பழந்தமிழர் பாலை நிலம் என்று எதனைக் கூறினர் ?
    8.
    தமிழகத்தின் மருத நிலப்பகுதியில் பாய்ந்த ஒரு சில ஆறுகளைக் கூறுக.
    9.
    காவிரி ஆறு எங்கு ஊற்றெடுக்கிறது ?
    10.
    நெய்தல் நில மக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர் ?
புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 18:05:45(இந்திய நேரம்)