Primary tabs
4.0 பாட முன்னுரை
தொண்டை நாட்டை மையமாக வைத்து அரசாண்ட பல்லவர்கள் வடமொழிக்கு ஏற்றம் தருபவர்களாகத் தம் அரசியல் வாழ்வைத் தமிழகத்தில் துவக்கினர். அந்நாளில் பௌத்தமும், சமணமும் தமிழகத்தில் இருந்தன. ஐந்து, ஆறு, ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளில் கோலோச்சி, ஒன்பதாம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கையில் சைவ, வைண சமயங்கள் மேலோங்கி, அடியவராலும், ஆழ்வாராலும் தமிழ் உயர் நிலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலை தோன்றியது. சமண, பௌத்த இலக்கியங்களும் சில இருந்தன.