தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 6.8 தொகுப்புரை

    சைவ இலக்கியங்களைத் தொகுத்துப் பாதுகாக்கும் நிலையைத் தோற்றுவித்தது சோழர் ஆட்சிக்காலம். அவ்வாறே வைணவப் பாசுரங்களும் வைணவ வழியினரால் போற்றப்பட்டமைக்குத் தனியன்களே சான்றாகலாம். சமண, பௌத்த சமயங்கள் இருந்தன என்பதை இலக்கியங்கள் புலப்படுத்தும். அவை இறந்துபட்ட நிலையும் சிதைந்த நிலையில் கிடைத்ததும் செல்வாக்குக் குறைந்த சூழலை வெளிப்படுத்தும். சிற்றிலக்கியத் தோற்றத்திற்குத் தயாரான தருணம் இது. பன்னிருபாட்டியல், புறப்பொருள் வெண்பாமாலை, பிங்கல நிகண்டு போன்ற இலக்கண மற்றும் மொழியறி கருவி நூல்கள் எழுந்துள்ளன. கல்வெட்டு, மெய்க்கீர்த்திப் பாடல், சாசனப் பாடல் என்பன மன்னரைப் போற்றும் ஊடகங்களாகத் திகழ்ந்தன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.

    பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சமண சமயக் காப்பியங்களின் பெயர்களைத் தருக.

    2.

    கிடைக்கப்பெறாத நூல்கள்எவை? அவை உணர்த்தும் குறிப்புச் செய்தி யாது?

    3.

    இக்காலத்துத் தோன்றிய சோதிட நூல் எது? இயற்றியவர் யார்?

    4.

    பௌத்தக் காப்பிய நூல் எது? அது எந்த நூலுடன் எவ்விதத்தில் தொடர்புடையதாகச் சொல்லப்படுகிறது?

    5.

    மெய்க்கீர்த்தி என்றால் என்ன?

    6.

    இக்காலத்துத் தோன்றிய சோதிட நூல் எது? இயற்றியவர் யார்?

    7.

    இக்காலத்துத் தோன்றிய இலக்கண நூல்கள் இரண்டினைக் கூறுக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-08-2017 11:01:20(இந்திய நேரம்)