தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

New Page 1-உடுக்கைப் பாட்டு

  • உடுக்கைப்பாட்டு

    உடுக்கை என்னும் இசைக்கருவியை இசைத்துக் கொண்டு ஒரு
    கதையைப் பாட்டாக எடுத்துரைப்பது உடுக்கைப்பாட்டு எனப்படும்.
    கொங்குமண்டலப் பகுதிகளில் உள்ள கோயில் விழாக்களில், குறிப்பாக
    அண்ணமார்சாமி வழிபாட்டில், உடுக்கைப்பாட்டு சிறப்பிடம் பெறுகிறது.
    இறந்தோருக்காவும் ஆவிவயப்பட்டோரைக் குணப்படுத்துவதுற்கும்கூட
    உடுக்கைப்பாட்டுப் பாடும் வழக்கம் தமிழகத்தில் பரவலாக உள்ளது.

    தலைமைப்பாடகர் உடுக்கினை இசைத்துக்கொண்டு பாட, இருவர்
    பின்பாட்டுப் பாடுவர். சில பகுதிகளில் ஆண்கள் பெண் வேடமிட்டு
    உடுக்கைப் பாட்டிற்கேற்ப ஆடுவதும் உண்டு.


புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:45:06(இந்திய நேரம்)