தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

3-3:6-தொகுப்புரை

  • 3.6 தொகுப்புரை

    பாரதியாரின் தெய்வப்பாடல்கள் வழி அவர் இயற்கையை வழிபட்டதையும், ஒரே தெய்வத்தில் பல தெய்வங்களைப் பார்த்ததையும் காண முடிகிறது. எழுத்தறிவித்தல், தொழில் கல்வி போன்றவற்றைப் போற்றுவதே கலைமகள் வழிபாடு என்று காட்டுவதைக் காணலாம். அனைத்து மக்களுக்காக அவர் வேண்டியதையும் அறியலாம். எல்லாச் சமயங்களையும் ஒன்றாக அவர் எண்ணியதையும், ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ என்று அறிவுறுத்தியதையும் கண்டு மகிழலாம். பிறர் நலனுக்காக, நாட்டுக்காக வேண்டுவதன் மூலம் பிற கவிஞர்களிடமிருந்து தனித்து நிற்பதை உணரலாம். அறிவே தெய்வம் என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கத் தூண்டியதையும் அறிந்து கொள்ளலாம்.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    விநாயகர் எத்தகையவர்?
    2.
    இயேசுவைப் போல் மகிமை பெற என்ன செய்ய வேண்டும்?
    3.
    பாரதியின் வேண்டுதல்களின் தனித்தன்மை என்ன?
    4.
    இறைவனை வழிபடச் சிறந்த வழியென்று பாரதி எதைக் காட்டுகிறார்?
    5.
    பாரதி தெய்வம் என்று எவற்றைக் குறிப்பிடுகிறார்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:55:00(இந்திய நேரம்)