Primary tabs
-
4.0 பாட முன்னுரை
இனிய மாணவர்களே! புறநானூறு குறித்து மூன்று பாடங்களை இதுவரை படித்திருக்கின்றீர்கள். இது நான்காவது பாடம். இப்பாடத்தில் எட்டுப் பாடல்களைப் பற்றிய செய்திகளை அறிய இருக்கின்றீர்கள். அவ்வெட்டுப் பாடல்களின் எண்கள் வருமாறு : 226, 228, 229, 235, 239, 242, 243, 245.
இவ்வெட்டுப் பாடல்களும் வாழ்க்கை நிலையாமையைக் காட்டுவன. எனவே இவற்றின் திணை பொதுவியலாகவும், துறை கையறுநிலையாகவும், ஆனந்தப் பையுளாகவும் அமையக் காணலாம். விளக்கம் பின்னர் இடம்பெறும்.