தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Diplamo Course - D04142-வடமொழியில் கூட்டொலிகள்

  • 2.2 வடமொழியில் கூட்டொலிகள்

        வடமொழியில் ஐ, ஒள என்னும் இரண்டும் சந்தி அக்ஷரம் என்று கூறப்படுகின்றன. சந்தி என்ற சொல்லுக்குக் கூட்டு என்று பொருள் ; அக்ஷரம் என்ற சொல்லுக்கு எழுத்து அல்லது ஒலி என்று பொருள். சந்தி அக்ஷரம் என்பதற்குக் கூட்டெழுத்து அல்லது கூட்டொலி என்று பொருள். ஐ, ஒள ஆகிய இரண்டும், இரண்டு உயிர்களின் கூட்டால் உருவானவை என்று வடமொழியில் கூறப்படுகின்றன.

        அகர உயிர் ஒலி, இகர உயிர் ஒலி ஆகிய இரண்டு உயிர் ஒலிகளின் கூட்டால் தோன்றியது என்றும், அகர உயிர் ஒலி, உகர உயிர் ஒலி ஆகிய இரண்டு உயிர் ஒலிகளின் கூட்டால் தோன்றியது ஒள என்றும் வடமொழியில் கூறப்படுகின்றன.

         அ + இ = ஐ

        அ + உ = ஒள

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:29:46(இந்திய நேரம்)