தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 2.6 தொகுப்புரை     

        இப்பாடத்தில் கூட்டொலி என்றால் என்ன என்பது பற்றி விளக்கமாக அறிந்தீர்கள். ஐ, ஒள என்பன கூட்டொலிகள் என்பதை அறிந்தீர்கள். அவை இரண்டும் தமிழிலும். வடமொழியிலும் காணப்படுவதைத் தெரிந்து கொண்டீர்கள். வடமொழியில் இவை எந்த ஒலிகளின் கூட்டொலிகளாக வழங்குகின்றன என்பதை அறிந்துகொண்டீர்கள். கூட்டொலிகள் பற்றித் தமிழில் இருவேறு கருத்துகள் இருப்பதையும், அவ்விரு கருத்துகளையும் தொல்காப்பியர், நன்னூலார் ஆகியோர் குறிப்பிடுவதையும் தெளிவாக விளங்கிக் கொண்டீர்கள். கூட்டொலிகள் பற்றிய இரு கருத்துகளுள் மொழியியல் முறைக்குப் பொருந்தும் கருத்து யாது என்பதைச் சான்றுடன் அறிந்து கொண்டீர்கள். மேலும் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய நிலைகளில் எவ்வாறு வருகின்றன என்பதையும் விளக்கமாக அறிந்து கொண்டீர்கள்.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - II
    1.
    கைவேல் என்ற சொல் செய்யுளில் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது?
    2.
    ஐ, ஒள ஆகிய கூட்டொலிகளுக்கு யாப்பிலக்கண நூலார் குறிப்பிடும் மாத்திரை யாது?
    3.
    விளி ஏற்கும்போது, ஐ என்பது ஆய் என்று திரிந்ததாகக் கூறுவது மொழியியல் முறைக்குப் பொருந்துமா?
    4.
    ஐகாரம் சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய நிலைகளில் வருவதற்கு ஒவ்வொரு சான்று தருக.
    5.
    ஒளகாரம் சொல்லில் எந்த இடத்தில் வரும்?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 10:35:11(இந்திய நேரம்)