தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.0- பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை


        எந்த ஒரு சமயத்திலும் பல பிரிவுகள் இருப்பது
    இயற்கையாகும். தமிழகத்தில் தழைத்து வளர்ந்து சிறந்த நிலையில்
    இருந்த சமண சமயத்திலும் பல பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு
    சமயத்தைச் சார்ந்தவர்களின் வழிபாட்டு நெறிகளும் மாறுபட்டும் -
    வேறுபட்டும் அமைந்திருப்பது கண்கூடாகும். அதுமட்டுமின்றி
    ஒரே சமயத்தைச் சார்ந்த பல பிரிவினரின் வழிபாட்டு
    நெறிகளும்கூட மாறுபட்டதாக இருக்கக் கூடும். எனவே,
    இப்பாடத்தில் சமண சமயத்தில் உள்ள பிரிவுகள் பற்றியும்
    அவற்றைச் சார்ந்த சமணர்களது வழிபாட்டு நெறிமுறைகள்
    பற்றியும் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:37:53(இந்திய நேரம்)