தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.2-சமணத் தத்துவக் குறியீடு

  • 4.2 சமணத் தத்துவக் குறியீடு


        சமணத் தத்துவத்தைச் சுட்டும் குறியீடாக சுவஸ்திகம்
    என்ற அடையாளச் சின்னம் பயன்படுத்தப்படுகிறது. இதைப்
    பிறவிச் சக்கரம் என்றும் கூறுவர். இக்குறியைச் சமணர்களின்
    இல்லங்களிலும் கோயில்களிலும் காணலாம். சுவஸ்திகக் குறியீடு
    இது:

        உயிர்கள் செய்த புண்ணியங்களுக்கும் பாவங்களுக்கும்
    ஏற்ற வகையில் நான்கு கதிகளில் (தேவகதி, விலங்குகதி, நரககதி,
    மனித கதி) உயிர்கள் சிக்கித் தவிப்பதை இக்குறியீடு
    (அ) சுட்டுகிறது. இப் பிறவிச் சக்கரத்திற்கு மேலே உள்ள மூன்று
    புள்ளிகள் (ஆ) மும்மணிகளைக் (நன்ஞானம், நற்காட்சி,
    நல்லொழுக்கம்) குறிக்கின்றன.

        மூன்று புள்ளிகளுக்கு மேலே உள்ள பிறை போன்ற
    கோடும், அக்கோட்டிற்கு மேலே உள்ள ஒற்றைப் புள்ளியும்
    (இ) இருவினைகளை நீக்கி வீடுபேறு அடைந்த உயிரைக்
    குறிப்பிடுகின்றன.


    தன்மதிப்பீடு : வினாக்கள் - I

    (1)
    நவ பதார்த்தம் என்பது எதைக் குறிக்கும்?
    (2)
    சமண சமயக் கொள்கைப்படி உயிர்கள் எத்தனை
    வகைப்படும்?
    (3)
    ‘பெரியதன் ஆவி பெரிது’ - பொருள் தருக
    (4)
    காலம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
    (5)
    சமணத் தத்துவத்தைச் சுட்டும் குறியீடு யாது?
    விளக்குக.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:39:16(இந்திய நேரம்)