தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.4- இல்லறத்தாரின் ஒழுக்கங்கள்

  • 4.4 இல்லறத்தாரின் ஒழுக்கங்கள்


        மாணவர்களே! சமணத் துறவிகளின் 28 ஒழுக்கங்களைப்
    பற்றி அறிந்து கொண்ட நீங்கள் இப்பொழுது சமண சமயத்தில்
    இல்லற (குடும்ப) வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் 10 ஒழுக்கங்கள்
    பற்றித் தெரிந்து கொள்ளப் போகின்றீர்கள்.

    பத்து ஒழுக்கங்களாவன:

    1.
    கொல்லாமை
    -
    உயிர்க் கொலை     செய்யாது
    இருத்தல்.
    2.
    பொய்யாமை
    -
    பொய் பேசாது உண்மையே
    பேசுதல்.
    3.
    கள்ளாமை
    -
    பிறர் பொருளைக் களவாடாமல்
    (திருடாமல்) இருத்தல்.
    4.
    பிறன் மனை
    விரும்பாமை
    -
    பிறரின் மனைவியை மனத்தால்
    கூட நினைக்காமை.
    5.
    பொருள் வரைதல்
    -
    அளவாகப் பொருளைச் சேர்த்தல்.
    6.
    கள் உண்ணாமை
    -
    கள் (மது) உண்ணாமல் இருத்தல்.
    7.
    ஊன் உண்ணாமை
    -
    ஊன் (இறைச்சி) உண்ணாமல்
    இருத்தல்.
    8.
    தேன் உண்ணாமை
    -
    தேன் உண்ணாமல் இருத்தல்.
    9.
    இரவு உண்ணாமை
    -
    இரவு நேரத்தில் உண்ணாமல் பகல்
    பொழுதில் மட்டுமே உண்ணுதல்.
    10.
    பெரியோரை
    வணங்குதல்
    -
    தீர்த்தங்கரர் உள்ளிட்ட பெரியோரை
    வணங்குதல்.

        இப்பத்து ஒழுக்கங்களையும் சமண சமய இல்லறத்தார்
    தவறாது பின்பற்றி நடக்க வேண்டும். அதுபோல் சமணத்
    துறவிகள் மேலே கூறிய 28 ஒழுக்கங்களையும் தவறாது பின்பற்றி
    நடக்க வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:39:22(இந்திய நேரம்)