Primary tabs
-
4.4 இல்லறத்தாரின் ஒழுக்கங்கள்
மாணவர்களே! சமணத் துறவிகளின் 28 ஒழுக்கங்களைப்
பற்றி அறிந்து கொண்ட நீங்கள் இப்பொழுது சமண சமயத்தில்
இல்லற (குடும்ப) வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்களின் 10 ஒழுக்கங்கள்
பற்றித் தெரிந்து கொள்ளப் போகின்றீர்கள்.பத்து ஒழுக்கங்களாவன:
1.கொல்லாமை-உயிர்க் கொலை செய்யாது
இருத்தல்.2.பொய்யாமை-பொய் பேசாது உண்மையே
பேசுதல்.3.கள்ளாமை-பிறர் பொருளைக் களவாடாமல்
(திருடாமல்) இருத்தல்.4.பிறன் மனை
விரும்பாமை-பிறரின் மனைவியை மனத்தால்
கூட நினைக்காமை.5.பொருள் வரைதல்-அளவாகப் பொருளைச் சேர்த்தல்.6.கள் உண்ணாமை-கள் (மது) உண்ணாமல் இருத்தல்.7.ஊன் உண்ணாமை-ஊன் (இறைச்சி) உண்ணாமல்
இருத்தல்.8.தேன் உண்ணாமை-தேன் உண்ணாமல் இருத்தல்.9.இரவு உண்ணாமை-இரவு நேரத்தில் உண்ணாமல் பகல்
பொழுதில் மட்டுமே உண்ணுதல்.10.பெரியோரை
வணங்குதல்-தீர்த்தங்கரர் உள்ளிட்ட பெரியோரை
வணங்குதல்.இப்பத்து ஒழுக்கங்களையும் சமண சமய இல்லறத்தார்
தவறாது பின்பற்றி நடக்க வேண்டும். அதுபோல் சமணத்
துறவிகள் மேலே கூறிய 28 ஒழுக்கங்களையும் தவறாது பின்பற்றி
நடக்க வேண்டும்.