தவமணி |
- பாரதி இன்றைக்குப் பள்ளி முடித்துச் சீக்கிரம் வருகிறாயா?
|
பாரதி |
- ஓ! வருகிறேனே. என்ன காரணம்? |
தவமணி |
- தோட்டத்தில் வேலை இருக்கிறது பாரதி. |
பாரதி |
- என்ன வேலை அம்மா? |
தவமணி |
- நம் வீட்டில் போட்ட முல்லைக் கொடிக்குக் கொம்பு நட்டுப் பந்தல்
போடவேண்டும் என்று சொன்னேனே? |
பாரதி |
- அம்மா. அது இன்னும் சிறு செடியாகத்தானே இருக்கிறது? அதற்குள்
என்னம்மா அவசரம்?
|
தவமணி |
- நன்றாகப் பார். இதோ அந்தச் செடியின் நுனியில் கொடிக்கான முளை
வருவதை.......
|
பாரதி |
- வரட்டுமே. இன்னும் பெரிதாக வந்தவுடன் கொம்பு நடலாமே அம்மா? |
தவமணி |
- பசிக்கிற நேரத்தில் உணவு உண்ணாமல் காலம் கடந்து உண்டால் என்ன ஆகும்? இது தான் சரியான பருவம் |
பாரதி |
- அடுத்தவாரம் பள்ளி விடுமுறை. அந்த நாளில் பந்தல் போட்டுக்
கொள்ளலாமே அம்மா? |
தவமணி |
- இல்லை பாரி..... இதோ காற்று அடித்தவுடன் அந்தக் கொடி என்ன
பாடுபடுகிறது பார். முல்லைக் கொடிக்காகத் தன் தேரையே கொடுத்தான்
ஒரு மன்னன். நீ ஒரு பந்தல் போடவாவது உதவக்கூடாதா? |
பாரதி |
- கொடிக்காகத் தன் தேரையே கொடுத்தானா? |
தவமணி |
- ஆமாம். பாரதி. அப்படி நடந்த வரலாறு இருக்கிறது. |
பாரதி |
- உண்மைதானா, அம்மா? |
தவமணி |
- ஆம். அந்த வரலாற்றை நான் மாலையில் சொல்லுகிறேன். முல்லைக் கொடிக்குப் பந்தல் போட்டுக்கொண்டே சொல்லலாமா?
|
பாரதி |
- நிச்சயமாக அம்மா. எனக்கு அந்த வரலாற்றைக் கேட்க ஆவலாக
இருக்கிறது. எனவே, எனது விளையாடும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு
சீக்கிரம் வந்துவிடுகிறேன். |
தவமணி |
- நல்லது பாரதி. கவனமாகச் சென்றுவா. |
பாரதி |
- சரி அம்மா. |