வள்ளல் பாரி
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. செய்யுள் வடிவில் தமிழில் தோன்றிய நாடகநூல் ---------- ஆகும்.
செய்யுள் வடிவில் தமிழில் தோன்றிய நாடகநூல்மனோன்மணீயம் ஆகும்.
2. மேடைகளில் நடிக்கப் பயன்படும் நாடகங்கள் --------- ஆகும்.
மேடைகளில் நடிக்கப் பயன்படும் நாடகங்கள்மேடை நாடகங்கள் ஆகும்.
3. சங்க இலக்கியப் பாடல்களில் மலர்களைக் குறித்து அதிகமான பாடல்களைப் பாடியவர் --------
சங்க இலக்கியப் பாடல்களில் மலர்களைக் குறித்து அதிகமான பாடல்களைப் பாடியவர் கபிலர்
4. பறம்புமலையின் தற்காலப் பெயர் -------- ஆகும்.
பறம்புமலையின் தற்காலப் பெயர் பிரான்மலை ஆகும்
5. வண்டு துளைத்த மூங்கிலில் புகுந்த காற்று ----------- இசையைத் தந்தது.
வண்டு துளைத்த மூங்கிலில் புகுந்த காற்று புல்லாங்குழல் இசையைத் தந்தது.
6. பாரி வள்ளலின் நெருங்கிய நட்புடைய சங்கப்புலவர் ----------.
பாரி வள்ளலின் நெருங்கிய நட்புடைய சங்கப்புலவர் கபிலர்.
7. இல்லையென்று வருபவர்க்கு இல்லை என்று சொல்லாது கொடுப்பவர் ----.
இல்லையென்று வருபவர்க்கு இல்லை என்று சொல்லாது கொடுப்பவர் வள்ளல்.
8. பாரி வள்ளலின் நாட்டுக்குத் தலைநகரமாக ---------- விளங்கியது.
பாரி வள்ளலின் நாட்டுக்குத் தலைநகரமாக பறம்புமலை விளங்கியது.
9. பாரதியின் பிறந்த நாள் பரிசாகக் கைக்குட்டையை வழங்கியத் தோழி ----.
பாரதியின் பிறந்த நாள் பரிசாகக் கைக்குட்டையை வழங்கியத் தோழி கலை
10. ஓடியத் தேருக்கு முன்னால் ஒரு ----------- தடுமாறி விழுந்து கிடப்பதைப்போல முல்லைக் கொடி பாரிவள்ளலுக்குத் தோன்றியது.
ஓடியத் தேருக்கு முன்னால் ஒரு குழந்தை தடுமாறி விழுந்து கிடப்பதைப்போல முல்லைக் கொடி பாரிவள்ளலுக்குத் தோன்றியது.