வள்ளல் பாரி

வள்ளல் பாரி

பாடம்
Lesson


காட்சி - 5

இடம் - பறம்புநாட்டுத் தெரு.
இடம் பெறுவோர் - பாரி, பொதுமக்கள், மற்றும் பலர்

 
மக்களுள் ஒருவர் - என்ன ஆயிற்று நம்மன்னவர் பாரிக்கு?
இன்னொருவர் - என்னவாம்?
இன்னொருவர் - மலைவளம் காணச்சென்ற நம் மன்னவர் தேர் இல்லாமல் தனியே அதுவும் தெருவில் நடந்து....
மக்களுள் ஒருவர் - ஏதேனும் பழுது நேர்ந்ததா?
இன்னொருவர் - அல்லது பகையாளிகள்?.
மக்களுள் ஒருவர் - பறம்புநாட்டில் பகையா? இருக்காது. வேறு ஏதேனும்...
இன்னொருவர் - அதோ ஒரு காவலர் ஓடி மன்னரிடம் கேட்கிறார். வாருங்கள் கவனிப்போம்.
காவலர் - 1 - என்னாயிற்று மன்னவா?
பாரி - எல்லாம் ஒழுங்காயிற்று. இப்போதுதான் நிம்மதி.
காவலர் - 1 - என்ன? என்ன?
(சிரித்தபடி ஒன்றும் பேசாமல் பாரி மன்னன் முன்னேற அந்தக் காவலனும், அவனைப் பின்தொடர்ந்து மக்களும் நடக்கிறார்கள்?
இன்னொருவர் - என்னவாம்?
காவலர் - உண்மை கண்டறியச் சென்ற ஒற்றனை இன்னும் காணோமே.....
காவலர் - 2 - அதோ ஓடி வருகிறான் ஒற்றன். என்னவாம் செய்தி.
ஒற்றர் - வள்ளல் பாரி நம் மன்னவன் முல்லைக்கொடி படரத் தன்தேர் தந்து நடந்தே வருகின்றார் அரண்மனைக்கு.
காவலர் - 1 - முல்லைக்குத் தேரா?
மற்றொருவர் - இது என்னப் புதியக் கொடை?
மக்கள் - முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் பாரி
அனைவரும் - வாழ்க வாழ்க
மக்கள் - வாடிய முல்லைக்கு ஓடிடும் தேர் தந்த நம் வள்ளல் பாரி
அனைவரும் - வாழ்க வாழ்க